Tuesday, May 17, 2011

தர்ஹா வழிபாட்டிற்கெதிராக...: வருங்கால அவ்லியா?!

Wednesday, April 13, 2011

அறிவு இயலாமை வன்முறை

விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார் - ஜிஎன்.

அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாம் என்ற தனது கட்டுரையில் தலைப்பில் கூட அரசியலையே முதன்மைப்படுத்தி இஸ்லாத்தின் ஆன்மீக பலத்தை அரசியல் பலமாக சித்தரிக்க முற்பட்டுள்ளார் நேசக் குமார் என்ற ஒரு இஸ்லாத்திற்கு எதிரான விமர்சகர்.

தனது தகுதிக்கு ஏற்றார்போலதான் சிந்திக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தியுள்ளார் நண்பர் நேசக்குமார்.

சந்திக்கும் தொலைவில் அவர் (போன்றோர்) இருந்தால் கலந்துரையாடலுக்கோ, நேர்கானலுக்கோ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். அதற்கு வழியில்லை என்றே நினைக்கிறேன்.

இஸ்லாம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கமல்ல - 'அரசியலிலிருந்து மதத்தை பிரித்து விடுங்கள்' என்று சொல்லி மதத்தை ஊனப்படுத்துவதையோ, அரசியல் ரவுடித்தனங்களை கண்டுக் கொள்ளாமல் மதம் ஒதுங்கி நின்று "மறைமுக ஆசிர்வாதம்" செய்து மகிழ்வதையோ இஸ்லாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது.

இஸ்லாத்தின் ஆன்மீக பலம் நூறு சதவிகிதம் என்றால் அது வழிகாட்டும் அரசியல் பலம் என்பதும் வலுவானதாகத்தான் இருக்கும்.

அரசியலை சொல்லாத எந்த ஆன்மீகமும் ஆட்சியாளர்களை, அதிகாரம் பெற்றவர்களை 'வல்லாதிக்க'த்தின் பக்கமே இழுத்து சென்றுக் கொண்டிருக்கும். அரசியலை சொல்லாத ஆன்மீக மதங்களை ஏற்றவர்கள் ஆட்சிப் புரியும் நாடுகளின் 'ஆட்சியாளர்கள் சிலரால் தான்' உலகம் அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறதே தவிர நேசக்குமாரன் எடுத்துக்காட்டும் ஆப்கானிஸ்தான் - ஈரான் - ஈராக் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களால் உலகின் அமைதி கெட்டுப்போகவில்லை. ஆதாரங்கள் இல்லாத போதும் அனைவரும் பாடும் பஜனையை நாமும் பாடினால் அது உண்மையாகி விடும் என்று நேசக்குமாரர்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இயலாவிட்டால் குறைந்த பட்சம் தாம் யார் என்பதை பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவாவது செய்யட்டும்.

இனி நேசக்குமாரின் வாதங்களை பார்ப்போம்.

அரசியல் இஸ்லாம்ஆன்மீக இஸ்லாத்தின் அடித்தளம் உருவமிலா ஏக இறைக் கொள்கை என்றால், அரசியல் இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவது நபிவழிபாடு. இந்த அரசியல் இஸ்லாத்தை நபிகளார் முன்மொழிந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று அந்தக் கால கிறித்துவர்களும், யூதர்களும் கூறிய குற்றச் சாட்டுக்களிலிருந்து, இன்று கூறப்படும் அச்சூழலுக்கேயான நிர்ப்பந்தங்கள் என்பது வரை ஏகப் பட்ட காரணங்கள் இதன் தோற்றுவாய் என அறிஞர்களால் இன்றளவும் விவாதிக்கப் பட்டுவருகின்றன. **நேசக்குமார்

  • உருவமில்லா இறைக் கொள்கை என்று இஸ்லாத்தில் எந்தக் கொள்கையும் இல்லை. கடவுளை யாரும் நேரில் காணாததால் அவன் உருவத்தை யாரும் கற்பனை செய்யாதீர்கள் என்பதுதான் இஸ்லாம் முன் வைக்கும் வாதம். உருவமற்ற சூனியத்தை எந்த முஸ்லிமும் வணங்கவில்லை. இறைவன் அவனுக்கே உரிய தன்மைகளுடனும் - உருவத்துடனும் இருக்கத்தான் செய்கிறான் அவனது உருவம் மனித சிந்தனைக்கோ - கற்பனைக்கோ உட்படாதது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. (மனித சிந்தனை வடிவமைத்துள்ள கடவுளைப் பாருங்கள். அந்த கற்பனைகளில் கடவுள் எத்துனை கேவலப்படுத்தப்பட்டுள்ளான் என்பது புரியும்)
  • முஹம்மத் அவர்கள் முன் மொழிந்தது அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று யூதமும் - கிறிஸ்த்துவமும் சொன்னதும் இன்றைக்கும் சொல்வதும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் முஹம்மத் அவர்களோ அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களோ யூதர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (மோசே) கிறிஸ்த்துவர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (இயேசு) ஒருபோதும் குறை சொன்னதே கிடையாது.
  • முஹம்மத் அவர்கள் வருவதற்கு முன் இயேசு முன் மொழிந்த ஆன்மீகத்தைக் கூட அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் சவுல் உட்பட 'இயேசுவின் ஆன்மீக மோசடி' என்றே வர்ணித்தார்கள் என்பதை நேசக்குமார் நினைவுக் கூற வேண்டும்.

**'இஸ்லாமியர்களிடையே கூட முற்போக்கானவர்கள் என தம்மை கருதிக் கொள்வோர், அரசியல் இஸ்லாத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து இப்போதெல்லாம் கருத்து தெரிவிப்பதை பார்க்க முடிகிறது'**நேசக்குமார்

  • இன்றைக்கு உலகில் நடக்கக் கூடிய அரசியலில் எந்த அரசியலை 'இஸ்லாமிய அரசியல்' என்று இஸ்லாமிய முற்போக்குவாதிகள் கருதுகிறாரகள் என்பதை நேசக்குமார் சற்று புரியும் படி விளக்கட்டும்.

**அரசியல் இஸ்லாம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அரசியல் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாமல் அடிப்படைவாத முஸ்லிம்களின் பேச்சை, செயல்பாட்டை, சிந்தனா முறையை புரிந்து கொள்ள முடியாது.அரசியல் இஸ்லாத்தின் நம்பிக்கைகள்இந்த அரசியல் இஸ்லாம் ஒப்புக் கொள்ளும் 'உண்மையான முஸ்லிம்கள்' கீழ்க்கண்ட நம்பிக்கைகளை உடையவர்கள்:

1. அல்லாஹ் எனும் ஏக இறைவனை மட்டுமே உலகம் முழுக்க உள்ளோர் வணங்க வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், 'அல்லாஹ்' என்ற அரபிப் பெயரில் - திருக்குரான் மற்றும் ஹதீதுகள் வர்ணிக்கும் குணாதிசயங்களுடன் மட்டுமே இக்கடவுளை வணங்க வேண்டும். கடவுள் என்றோ, பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம் போன்ற பெயர்களில் கூட இந்த ஏக இறைவனை வணங்கக் கூடாது. இந்த கடவுளுக்கு திருக்குரான் கற்பிக்கும் குணங்களையே வரித்து வணங்க வேண்டும். இந்த அல்லாஹ்வை கருணையுள்ள ஒரு கடவுளாகவோ(கிறிஸ்துவர்களைப் போன்று), தாயுணர்வு நிரம்பிய ஒரு அன்புத் தெய்வமாகவோ(இந்துக்களைப் போன்று), விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாகவோ (இந்துக்களில் ஒரு பகுதியினர் கருதுவது போன்று) இம்மாதிரி, தமக்கு பிடித்த, வேண்டுகிற குணாதிசயங்களோடு உள்ள கடவுளாக உருவகப் படுத்தி வணங்கக் கூடாது.(திருக்குரான், இந்த 'அல்லாஹ்' வை ஒரு பொறாமை குணம் கொண்ட, கடுமையான ஆணாதிக்க அரபிக் கடவுளாக உருவகம் செய்கிறது). கவனித்துப் பார்த்தால், இதை மூடி மறைத்து அழகிய வாதங்களுடன், தர்க்க நியாயங்களுடன் இஸ்லாமிஸ்டுகள் நியாயப் படுத்துவார்கள்.**நேசக்குமார்

  • இந்த வாதங்கள் நேசக்குமாரனின் இயலாமையா.. அல்லது வன்முறைக்கு வித்திடும் முதல் படியா என்பதை புரிந்துக் கொள் சற்று கடினமாகத்தான் இருக்கின்றது.
  • 'மொழி என்பதும் அதன் வார்த்தைகள் என்பதும் ஒன்றைப் புரிந்துக் கொள்வதற்காக உதவிடும் ஒரு கருவியாகும்' தமிழ் என்பது எப்படி ஒரு மொழியோ அதேபோன்றுதான் அரபும். 'இலாஹ்' என்பதும் 'அல்லாஹ்" என்பதும் அந்த மொழியில் ஒரு பரம்பொருளை சுட்டும் வார்த்தைகளாகும். முஹம்மத் அந்த மண்ணில் தனது பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன் அந்த மக்களிடம் இருந்த ஆன்மீக நம்பிக்கையும் அந்த நம்பிக்கைக்காக அந்த மக்கள் வெளிப்படுத்திய வார்த்தையும் அல்லாஹ் என்றே இருந்தது.
  • முஹம்மத் வந்து இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தவில்லை. அரபு மொழி பேசக் கூடிய யூத - கிறிஸ்த்துவர்கள் கூட அன்றிலிருந்து இன்றுவரை கடவுளை குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையே பயனடுத்தி வருகிறார்கள். தமிழக கிறிஸ்த்துவர்களுக்கு வேண்டுமானால் 'அல்லாஹ்' என்ற வார்த்தை முஸ்லிம்களின் வார்த்தையாகத் தெரியலாம். அரபு நாட்டு கிறிஸ்த்தவர்களுக்கு முஹம்மத் அவர்கள் வருவதற்க முன்பே அது மிக பரச்சயப்பட்ட வார்த்தையாகும்.
  • முஸ்லிம்கள், நேசக்குமார் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளால் அல்லாஹ்வை குறிப்பிடுவதில்லை காரணம் என்ன?
  • பெற்றெடுத்தவள் தாய், தாய் என்ற அந்தஸ்த்தை உலகில் ஒருவளுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும். அவளை தாய் என்றோ, ஆத்தாள் என்றோ, அம்மா என்றோ அவளது கண்ணியம் குறையாத எந்த வார்த்தையாளும் குறிப்பிடலாம். ஆனால் பெற்றத்தாயை யாரும் மகள் என்றோ, சின்னாத்தாள் என்றோ, சகோதரி மனைவி என்றோ குறிப்பிட முடியுமா..? மகள், சகோதரி, சிறிய தாய் மனைவி போன்ற வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அந்த வார்த்தைகளிலிருந்து பெறப்படும் பொருள் பெற்றத் தாயுடன் பொருந்திப்போகக் கூடியதல்ல. அந்த வார்த்தைகள் சுட்டும் தன்மைகள் பெற்றத்தாயின் தன்மைகளை ஒத்திருக்கக் கூடியவையல்ல.
  • இப்போது சிந்திப்போம்.
  • மாற்றுக் கொள்கையுள்ள மதத்தவர்கள் 'பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம்" என்றெல்லாம் கடவுளை குறிப்பிடுகிறார்கள் என்று மேலோட்டமாக பூசி மொழுகாமல் அந்த வார்த்தைகளிலிருந்து கடவுள் குறித்து அவர்கள் விளங்கியுள்ள பொருளும் அதன் தன்மைகளும் என்ன என்பதை பார்க்கும் போது அவர்கள் கடவுளாக விளங்கியுள்ள அந்த சிந்தனை வெளிப்பாடுகள் கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால் அந்த சக்திக்கு எந்த விதத்திலும் பொருந்திப் போகக் கூடியவையாக இருக்கவேயில்லை. (இதுபற்றி இறைவனும் அவன் தன்மைகளும் என்ற கட்டுரையில் நாம் விரிவாக விளக்கியுள்ளோம்) இறைவனுக்கு எந்தத் தகுதிகளெல்லாம் இருக்கக் கூடாதோ அந்தத் தகுதிகளுடன் அந்தத் தகுதியை குறிக்கும் பெயர்களுடன் பிறர் இறைவனை கற்பனை செய்துக் கொள்வதையே முஸ்லிம்களும் கடைபிடிக்க வேண்டுமாம். முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ள அந்த இறைவனிடம் கருணையுள்ளம் இல்லையாம். (இயேசுவுக்கு (அதாவது இயேசுவாக கருதப்படுபவருக்கு) ஓட்டு) முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட இறைவனிடத்தில் தாயன்பு இல்லையாம் (தாயாக சித்தரிக்கப்படும் பல சிலைகளுக்கு ஓட்டு) இப்படியெல்லாம் சிந்தனைப்பூர்வமாக? ஆராய்ச்சிப்பூர்வமாக? எழுதிக் கொண்டே போகிறார் நேசக்குமார்.
  • பெண் என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயின்றுவிட்டு தாயையும் தாரத்தையும் ஒரே இயல்புடன் பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை. இவளும் பெண்தான் அவளும் பெண்தான் என்று தாரத்திடம் கிடைக்க வேண்டியதை தாயிடம் எதிர்பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை.
  • பெண் என்றாலும் தாயும் தாரமும் வெவ்வேறானவர்கள் என் தேவைக்காக நான் இருவரையும் சம கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறு என்று ஒருவேளை நேசக்குமாரன் சிந்தித்தால் 'நீ பிற்போக்கான சிந்தனையில் மூழ்குகிறாய்' என்று அவரது உள் மனம் அவரை கிண்டல் செய்தாலும் செய்யும்.
  • இறைவனுக்கு இருக்க வேண்டிய அத்துனை பண்புகளும், தன்மைகளும் திருக்குர்ஆனில் ஆயிரக்கணக்கான வசனங்களில் சொல்லப்படிருந்தும் - திருக்குர்ஆனின் ஆரம்ப வசனங்களிலேயே இறைவன் அளவற்ற அருளாளன் - நிகரற்ற அன்புடையோன் என்று அவனது கருணையும் - இரக்கமும் வெளிப்பட்டிருந்தும் நேசக்குமார் அந்த இறைவனை பொறாமைக் காரனாகவும், ஆணாதிக்க வெறிபிடித்தவனாகவும் சித்தரிக்கிறார் என்றால் சர்ச்சை நாயகனாக தன்னை சித்தரித்துக் கொள்வதற்கே அவர் கீ போர்டில் கை வைக்கிறார் என்பது புலப்படுகிறது.
  • அல்லாஹ்வை விட அவனது தூதரான முஹம்மத் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா... அரசியல் இஸ்லாம் என்று நேசக்குமாரர் எழுதியுள்ள வாதங்கள் என்ன.. தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

Sunday, April 10, 2011

அறிவு இயலாமை வன்முறை - 1

விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார் - ஜிஎன்.

அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாம் என்ற தனது கட்டுரையில் தலைப்பில் கூட அரசியலையே முதன்மைப்படுத்தி இஸ்லாத்தின் ஆன்மீக பலத்தை அரசியல் பலமாக சித்தரிக்க முற்பட்டுள்ளார் நேசக் குமார் என்ற ஒரு இஸ்லாத்திற்கு எதிரான விமர்சகர்.

தனது தகுதிக்கு ஏற்றார்போலதான் சிந்திக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தியுள்ளார் நண்பர் நேசக்குமார்.

சந்திக்கும் தொலைவில் அவர் (போன்றோர்) இருந்தால் கலந்துரையாடலுக்கோ, நேர்கானலுக்கோ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். அதற்கு வழியில்லை என்றே நினைக்கிறேன்.

இஸ்லாம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கமல்ல - 'அரசியலிலிருந்து மதத்தை பிரித்து விடுங்கள்' என்று சொல்லி மதத்தை ஊனப்படுத்துவதையோ, அரசியல் ரவுடித்தனங்களை கண்டுக் கொள்ளாமல் மதம் ஒதுங்கி நின்று "மறைமுக ஆசிர்வாதம்" செய்து மகிழ்வதையோ இஸ்லாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது.

இஸ்லாத்தின் ஆன்மீக பலம் நூறு சதவிகிதம் என்றால் அது வழிகாட்டும் அரசியல் பலம் என்பதும் வலுவானதாகத்தான் இருக்கும்.

அரசியலை சொல்லாத எந்த ஆன்மீகமும் ஆட்சியாளர்களை, அதிகாரம் பெற்றவர்களை 'வல்லாதிக்க'த்தின் பக்கமே இழுத்து சென்றுக் கொண்டிருக்கும். அரசியலை சொல்லாத ஆன்மீக மதங்களை ஏற்றவர்கள் ஆட்சிப் புரியும் நாடுகளின் 'ஆட்சியாளர்கள் சிலரால் தான்' உலகம் அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறதே தவிர நேசக்குமாரன் எடுத்துக்காட்டும் ஆப்கானிஸ்தான் - ஈரான் - ஈராக் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களால் உலகின் அமைதி கெட்டுப்போகவில்லை. ஆதாரங்கள் இல்லாத போதும் அனைவரும் பாடும் பஜனையை நாமும் பாடினால் அது உண்மையாகி விடும் என்று நேசக்குமாரர்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இயலாவிட்டால் குறைந்த பட்சம் தாம் யார் என்பதை பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவாவது செய்யட்டும்.

இனி நேசக்குமாரின் வாதங்களை பார்ப்போம்.

அரசியல் இஸ்லாம்ஆன்மீக இஸ்லாத்தின் அடித்தளம் உருவமிலா ஏக இறைக் கொள்கை என்றால், அரசியல் இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவது நபிவழிபாடு. இந்த அரசியல் இஸ்லாத்தை நபிகளார் முன்மொழிந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று அந்தக் கால கிறித்துவர்களும், யூதர்களும் கூறிய குற்றச் சாட்டுக்களிலிருந்து, இன்று கூறப்படும் அச்சூழலுக்கேயான நிர்ப்பந்தங்கள் என்பது வரை ஏகப் பட்ட காரணங்கள் இதன் தோற்றுவாய் என அறிஞர்களால் இன்றளவும் விவாதிக்கப் பட்டுவருகின்றன. **நேசக்குமார்

  • உருவமில்லா இறைக் கொள்கை என்று இஸ்லாத்தில் எந்தக் கொள்கையும் இல்லை. கடவுளை யாரும் நேரில் காணாததால் அவன் உருவத்தை யாரும் கற்பனை செய்யாதீர்கள் என்பதுதான் இஸ்லாம் முன் வைக்கும் வாதம். உருவமற்ற சூனியத்தை எந்த முஸ்லிமும் வணங்கவில்லை. இறைவன் அவனுக்கே உரிய தன்மைகளுடனும் - உருவத்துடனும் இருக்கத்தான் செய்கிறான் அவனது உருவம் மனித சிந்தனைக்கோ - கற்பனைக்கோ உட்படாதது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. (மனித சிந்தனை வடிவமைத்துள்ள கடவுளைப் பாருங்கள். அந்த கற்பனைகளில் கடவுள் எத்துனை கேவலப்படுத்தப்பட்டுள்ளான் என்பது புரியும்)
  • முஹம்மத் அவர்கள் முன் மொழிந்தது அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று யூதமும் - கிறிஸ்த்துவமும் சொன்னதும் இன்றைக்கும் சொல்வதும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் முஹம்மத் அவர்களோ அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களோ யூதர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (மோசே) கிறிஸ்த்துவர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (இயேசு) ஒருபோதும் குறை சொன்னதே கிடையாது.
  • முஹம்மத் அவர்கள் வருவதற்கு முன் இயேசு முன் மொழிந்த ஆன்மீகத்தைக் கூட அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் சவுல் உட்பட 'இயேசுவின் ஆன்மீக மோசடி' என்றே வர்ணித்தார்கள் என்பதை நேசக்குமார் நினைவுக் கூற வேண்டும்.

**'இஸ்லாமியர்களிடையே கூட முற்போக்கானவர்கள் என தம்மை கருதிக் கொள்வோர், அரசியல் இஸ்லாத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து இப்போதெல்லாம் கருத்து தெரிவிப்பதை பார்க்க முடிகிறது'**நேசக்குமார்

  • இன்றைக்கு உலகில் நடக்கக் கூடிய அரசியலில் எந்த அரசியலை 'இஸ்லாமிய அரசியல்' என்று இஸ்லாமிய முற்போக்குவாதிகள் கருதுகிறாரகள் என்பதை நேசக்குமார் சற்று புரியும் படி விளக்கட்டும்.

**அரசியல் இஸ்லாம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அரசியல் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாமல் அடிப்படைவாத முஸ்லிம்களின் பேச்சை, செயல்பாட்டை, சிந்தனா முறையை புரிந்து கொள்ள முடியாது.அரசியல் இஸ்லாத்தின் நம்பிக்கைகள்இந்த அரசியல் இஸ்லாம் ஒப்புக் கொள்ளும் 'உண்மையான முஸ்லிம்கள்' கீழ்க்கண்ட நம்பிக்கைகளை உடையவர்கள்:

1. அல்லாஹ் எனும் ஏக இறைவனை மட்டுமே உலகம் முழுக்க உள்ளோர் வணங்க வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், 'அல்லாஹ்' என்ற அரபிப் பெயரில் - திருக்குரான் மற்றும் ஹதீதுகள் வர்ணிக்கும் குணாதிசயங்களுடன் மட்டுமே இக்கடவுளை வணங்க வேண்டும். கடவுள் என்றோ, பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம் போன்ற பெயர்களில் கூட இந்த ஏக இறைவனை வணங்கக் கூடாது. இந்த கடவுளுக்கு திருக்குரான் கற்பிக்கும் குணங்களையே வரித்து வணங்க வேண்டும். இந்த அல்லாஹ்வை கருணையுள்ள ஒரு கடவுளாகவோ(கிறிஸ்துவர்களைப் போன்று), தாயுணர்வு நிரம்பிய ஒரு அன்புத் தெய்வமாகவோ(இந்துக்களைப் போன்று), விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாகவோ (இந்துக்களில் ஒரு பகுதியினர் கருதுவது போன்று) இம்மாதிரி, தமக்கு பிடித்த, வேண்டுகிற குணாதிசயங்களோடு உள்ள கடவுளாக உருவகப் படுத்தி வணங்கக் கூடாது.(திருக்குரான், இந்த 'அல்லாஹ்' வை ஒரு பொறாமை குணம் கொண்ட, கடுமையான ஆணாதிக்க அரபிக் கடவுளாக உருவகம் செய்கிறது). கவனித்துப் பார்த்தால், இதை மூடி மறைத்து அழகிய வாதங்களுடன், தர்க்க நியாயங்களுடன் இஸ்லாமிஸ்டுகள் நியாயப் படுத்துவார்கள்.**நேசக்குமார்

  • இந்த வாதங்கள் நேசக்குமாரனின் இயலாமையா.. அல்லது வன்முறைக்கு வித்திடும் முதல் படியா என்பதை புரிந்துக் கொள் சற்று கடினமாகத்தான் இருக்கின்றது.
  • 'மொழி என்பதும் அதன் வார்த்தைகள் என்பதும் ஒன்றைப் புரிந்துக் கொள்வதற்காக உதவிடும் ஒரு கருவியாகும்' தமிழ் என்பது எப்படி ஒரு மொழியோ அதேபோன்றுதான் அரபும். 'இலாஹ்' என்பதும் 'அல்லாஹ்" என்பதும் அந்த மொழியில் ஒரு பரம்பொருளை சுட்டும் வார்த்தைகளாகும். முஹம்மத் அந்த மண்ணில் தனது பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன் அந்த மக்களிடம் இருந்த ஆன்மீக நம்பிக்கையும் அந்த நம்பிக்கைக்காக அந்த மக்கள் வெளிப்படுத்திய வார்த்தையும் அல்லாஹ் என்றே இருந்தது.
  • முஹம்மத் வந்து இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தவில்லை. அரபு மொழி பேசக் கூடிய யூத - கிறிஸ்த்துவர்கள் கூட அன்றிலிருந்து இன்றுவரை கடவுளை குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையே பயனடுத்தி வருகிறார்கள். தமிழக கிறிஸ்த்துவர்களுக்கு வேண்டுமானால் 'அல்லாஹ்' என்ற வார்த்தை முஸ்லிம்களின் வார்த்தையாகத் தெரியலாம். அரபு நாட்டு கிறிஸ்த்தவர்களுக்கு முஹம்மத் அவர்கள் வருவதற்க முன்பே அது மிக பரச்சயப்பட்ட வார்த்தையாகும்.
  • முஸ்லிம்கள், நேசக்குமார் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளால் அல்லாஹ்வை குறிப்பிடுவதில்லை காரணம் என்ன?
  • பெற்றெடுத்தவள் தாய், தாய் என்ற அந்தஸ்த்தை உலகில் ஒருவளுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும். அவளை தாய் என்றோ, ஆத்தாள் என்றோ, அம்மா என்றோ அவளது கண்ணியம் குறையாத எந்த வார்த்தையாளும் குறிப்பிடலாம். ஆனால் பெற்றத்தாயை யாரும் மகள் என்றோ, சின்னாத்தாள் என்றோ, சகோதரி மனைவி என்றோ குறிப்பிட முடியுமா..? மகள், சகோதரி, சிறிய தாய் மனைவி போன்ற வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அந்த வார்த்தைகளிலிருந்து பெறப்படும் பொருள் பெற்றத் தாயுடன் பொருந்திப்போகக் கூடியதல்ல. அந்த வார்த்தைகள் சுட்டும் தன்மைகள் பெற்றத்தாயின் தன்மைகளை ஒத்திருக்கக் கூடியவையல்ல.
  • இப்போது சிந்திப்போம்.
  • மாற்றுக் கொள்கையுள்ள மதத்தவர்கள் 'பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம்" என்றெல்லாம் கடவுளை குறிப்பிடுகிறார்கள் என்று மேலோட்டமாக பூசி மொழுகாமல் அந்த வார்த்தைகளிலிருந்து கடவுள் குறித்து அவர்கள் விளங்கியுள்ள பொருளும் அதன் தன்மைகளும் என்ன என்பதை பார்க்கும் போது அவர்கள் கடவுளாக விளங்கியுள்ள அந்த சிந்தனை வெளிப்பாடுகள் கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால் அந்த சக்திக்கு எந்த விதத்திலும் பொருந்திப் போகக் கூடியவையாக இருக்கவேயில்லை. (இதுபற்றி இறைவனும் அவன் தன்மைகளும் என்ற கட்டுரையில் நாம் விரிவாக விளக்கியுள்ளோம்) இறைவனுக்கு எந்தத் தகுதிகளெல்லாம் இருக்கக் கூடாதோ அந்தத் தகுதிகளுடன் அந்தத் தகுதியை குறிக்கும் பெயர்களுடன் பிறர் இறைவனை கற்பனை செய்துக் கொள்வதையே முஸ்லிம்களும் கடைபிடிக்க வேண்டுமாம். முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ள அந்த இறைவனிடம் கருணையுள்ளம் இல்லையாம். (இயேசுவுக்கு (அதாவது இயேசுவாக கருதப்படுபவருக்கு) ஓட்டு) முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட இறைவனிடத்தில் தாயன்பு இல்லையாம் (தாயாக சித்தரிக்கப்படும் பல சிலைகளுக்கு ஓட்டு) இப்படியெல்லாம் சிந்தனைப்பூர்வமாக? ஆராய்ச்சிப்பூர்வமாக? எழுதிக் கொண்டே போகிறார் நேசக்குமார்.
  • பெண் என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயின்றுவிட்டு தாயையும் தாரத்தையும் ஒரே இயல்புடன் பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை. இவளும் பெண்தான் அவளும் பெண்தான் என்று தாரத்திடம் கிடைக்க வேண்டியதை தாயிடம் எதிர்பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை.
  • பெண் என்றாலும் தாயும் தாரமும் வெவ்வேறானவர்கள் என் தேவைக்காக நான் இருவரையும் சம கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறு என்று ஒருவேளை நேசக்குமாரன் சிந்தித்தால் 'நீ பிற்போக்கான சிந்தனையில் மூழ்குகிறாய்' என்று அவரது உள் மனம் அவரை கிண்டல் செய்தாலும் செய்யும்.
  • இறைவனுக்கு இருக்க வேண்டிய அத்துனை பண்புகளும், தன்மைகளும் திருக்குர்ஆனில் ஆயிரக்கணக்கான வசனங்களில் சொல்லப்படிருந்தும் - திருக்குர்ஆனின் ஆரம்ப வசனங்களிலேயே இறைவன் அளவற்ற அருளாளன் - நிகரற்ற அன்புடையோன் என்று அவனது கருணையும் - இரக்கமும் வெளிப்பட்டிருந்தும் நேசக்குமார் அந்த இறைவனை பொறாமைக் காரனாகவும், ஆணாதிக்க வெறிபிடித்தவனாகவும் சித்தரிக்கிறார் என்றால் சர்ச்சை நாயகனாக தன்னை சித்தரித்துக் கொள்வதற்கே அவர் கீ போர்டில் கை வைக்கிறார் என்பது புலப்படுகிறது.
  • அல்லாஹ்வை விட அவனது தூதரான முஹம்மத் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா... அரசியல் இஸ்லாம் என்று நேசக்குமாரர் எழுதியுள்ள வாதங்கள் என்ன.. தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா...? 3

ஆலு இம்ரான் 3:31 வது வசனத்தில் எல்லா நிலைகளிலும் முஹம்மத் என்ற இறைத்தூதர் அவர்களை பின்பற்றுவதின் அவசியம் பற்றி கூறப்பட்டள்ளது. அதில் இறைவனை நேசிக்கக் கூடிய ஆன்மீகவாதி எவராக இருந்தாலும் அவர் முஹம்மத் என்ற அந்த ஆன்மீகத்தலைவரை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்ற கட்டளை மிக வலுவாக முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை கடந்த இரண்டு தொடர்களில் விளக்கினோம். அடுத்து அந்த தலைவரை ஏற்றுக் கொண்டு வாழும் முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கையை மீண்டும் பரிசீலித்துக் கொள்ளும் விதத்தில் ஒரு தூண்டல் அந்த வசனத்தில் இருக்கின்றது.

அதை விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும்.

இங்கு இறைவன் 'என் வழியைப் பின்பற்றுங்கள்' என்று சொல்ல சொல்லாமல் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்று சொல்ல சொல்கிறான். என்னைப் பின்பற்றுங்கள் என்பதற்கும் என் வழியைப் பின்பற்றுங்கள் என்பதற்;கும் வித்தியாசம் உள்ளது.

'என் வழியைப் பின்பற்றுங்கள்' என்றால் அது வெறும் வார்த்தைகளிலிருந்து பெறும் வழிகாட்டலாகவே அமையும். ஏனெனில் வார்த்தைகள் தான் வழிகாட்டும்.

'என்னைப் பின்பற்றுங்கள்' என்பது மொத்தமாக ஒருவருடைய வாழ்க்கையே வழிகாட்டலாக அமைந்து விடுவதை குறிப்பதாகும்.

வாழ்ந்து மறைந்த - இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற உலகத் தலைவர்கள் அனைவரையும் - அவர் எந்தத் துறையை சார்ந்தவராக இருந்தாலும் சரி - நாம் எடுத்துக் கொள்வோமேயானால் அவர்கள், மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் அவர்களின் வழிகாட்டலாக இருக்குமே தவிர அவர்களின் வாழ்க்கையாக இருக்காது.

நல்ல கருத்துக்களை மேடையில் முழங்கி - பேனா முனையால், கீ-போர்டுகளால் கொட்டித்தீர்க்கும் ஒரு எழுத்தாளனோ பேச்சாளனோ தனது கருத்துக்கு மாற்றமாக நடக்கும் தருணங்களில் அதை பிறர் சுட்டிக்காட்டும் போது சர்வசாதாரணமாக 'என்னைப் பார்க்காதே, என் கருத்தைப் பார்' என்று வசனம் பேசிவிட்டு கழன்றுக் கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம்.

எல்லா துறைகளுக்கும் வழிகாட்டி 'என்னையும் பார் என் கருத்துக்களையும் பார் ஒன்றுக் கொன்று முரண்படவே செய்யாது' என்று துணிந்து அறிவித்து வாழக் கூடிய தகுதிப் பெற்றவர்கள் நிச்சயம் இறைத்தூதர்களாக மட்டுமே இருக்க முடியும். அதிலும் குறிப்பாக மாமனிதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அதில் முன்னணியில் இருப்பார்கள். அதனால் தான் இறைக் கட்டளைப் படி மிக துணிச்சலுடன் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற வாதத்தை அவர்களால் மக்கள் மன்றத்தில் வைக்க முடிந்தது. அவர்களின் வாழ்க்கை 100 சதவிகிதம் அங்கீகாரம் பெற்றதால் தான் இறைவனே 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற வழிகாட்டலை மக்கள் முன் வைக்க சொல்கிறான்.

என்னைப் பின்பற்றுங்கள் என்றால் எதில் பின்பற்றுவது என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு வரலாம். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லா விட்டாலும் கூட அவர்களின் வாழ்க்கையில் இந்த சந்தேகம் பிரதிபளிக்கின்றது.

கலை, இலக்கியம், பொருளாதாரம், பெண்ணியம், அரசியல், குடும்பம், ஆட்சியதிகாரம், ஊடகங்கள் என்று உலகில் வியாபித்து கிடக்கும் துறைகளில் முஸ்லிம்கள் ஏதோ ஒரு விதத்தில் பங்காற்றவே செய்கிறார்கள். இவற்றில் பங்காற்றும் பலதரப்பட்ட முஸ்லிம்களின் எண்ணவோட்டங்களும் பலதரப்பட்டவைகளாகவே அமைந்து விடுகின்றன.
முஸ்லிம் என்ற பெயரால் உலகமகா இறை இயக்கத்தில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள இவர்கள் 'தாம் எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் பிரச்சனையில்லை அந்த துறைக்கு தாம் இணைந்துள்ள இறைஇயக்கமும் அந்த இயக்கத்தின் கடைசித் தலைவரும் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள்' என்ற எண்ணத்தை வளர்;த்துக் கொண்டே தம் பணியைத் துவங்க வேண்டும். இதை அந்த வசனம் தன்னுள் பொதித்து வைத்துள்ளது.
துரதிஷ்டவசமாக பெரும்பான்மையான முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கின்றதென்றால் 'தாம் ஏற்றுக் கொண்டுள்ள முஹம்மத்(ஸல்) அவர்கள் தொழுகைக்கும் நோன்பிற்கும் ஹஜ்ஜூக்கும் உரியவர்கள்' என்ற நிலையிலேயே இருக்கின்றது.

'பள்ளிவாசல் கட்டுதல் - தொப்பிப் போட்டுக் கொள்ளுதல் - தராவீஹ் பற்றி விவாதித்தல் - தர்காவையும், மௌலீதையும் அவர்களோடு சம்பந்தப்படுத்திப் பேசுதல் இவற்றிற்காகத்தான் முஹம்மத்(ஸல்) அவர்கள்' என்ற நிலையைப் பரவலாக பார்க்க முடிகின்றது.

இஸ்லாமிய இயக்கத்திலும் அதன் இலட்சியங்களிலும் இது மிக மிக மிக மிக சிறிய பகுதியாகும். 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற கட்டளையை இப்படி மிக மிக சிறிய அளவில் வைத்து முடக்கிவிடும் முயற்சியை இப்படியும் அப்படியுமாக சில முஸ்லிம்கள் செய்து வருகிறார்கள். அந்த வசனத்தின் ஆழம் புரியாததே இதற்கு காரணமாகும்.

என்னைப் பின்பற்றுங்கள் என்பதில்,

என் ஆன்மீகத்தைப் பின்பற்றுங்கள்,

என் அரசியலைப் பின்பற்றுங்கள்,

என் குடும்ப இயலைப் பின்பற்றுங்கள்,

என் பொருளியலைப் பின்பற்றுங்கள்,

என் இலக்கியத்தையும், வீரத்தையும், விவேகத்தையும், நட்பையும் நலினத்தையும், மறுமை உறுதியையும் உலக பற்றின்மையையும்,  நடை உடை பாவனைகளையும் பின்பற்றுங்கள் என்பது உட்பட அவர்களின் மொத்த வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் பொதிந்துள்ளது.

இதை விளங்காததால் தான் கல்வியறிவு பெற்றுள்ள முஸ்லிம்கள் முதல் பாமர முஸ்லிம்கள் வரை ஒவ்வொரு துறைக்கு ஒரு தலைவர் என்று பல தலைவர்களை தங்கள் வழிகாட்டிகளாக்கிக் கொண்டு அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆன்மீகத் தலைவர்கள்.

பிறரால் எந்த வகையிலும் அந்த இடத்தை நிரப்ப முடியாத அளவிற்கு துளியும் குறை வைக்காமல் பணியாற்றி விட்டு சென்ற அந்த ஆன்மீகத் தலைவரை ஏற்றுக் கொண்ட சமுதாயம் அந்த மாபெரும் தலைவரின் மறைவுக்குப் பிறகு அனேக ஆன்மீகத் தலைவர்களை உருவாக்கிக் கொண்டது.

முஸ்லிம்களின் ஆன்மீக வழியை தீர்மானிப்பதில் இடம் பெற்றுள்ள ஆன்மீகத் தலைவர்களைப் பார்ப்போம்.

அபூ ஹனிபா (ஹனபி இமாம்) முஹம்மத் பின் இத்ரீஸ் (ஷாபி இமாம்) மாலிக் பின் அனஸ் (மாலிக் இமாம்) அஹ்மத் பின் ஹம்பல்(ஹம்பலி இமாம்) அவ்ஸாயி, தவ்ரி, இப்னுத் தைமிய்யா, கஸ்ஸாலி, இப்னுஅரபி, முஹையத்தீன், முஹம்மத் பின் அப்துல்வஹாப் இப்படியாக அகில உலக பிரபல்யமான தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இவர்களில் எவரையாவது ஏற்றுப் பின்பற்றினால் தான் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களில் பெரும்பாலோர் இடத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஆழமாகப் பதிந்துப் போய் விட்டது. விளைவு?! மத்ஹப் பிரிவினைகள் உருவாயின! இறைவனும் மனிதனும் இரண்டர கலந்து விட முடியும் என்ற மகா பயங்கர அத்வைதக் கொள்கைப் பிரிவு உருவாகியது! தரீக்கா பிரிவும் தர்கா பிரிவும் உருவாயின! வஹ்ஹாபிய்யத் பிரிவு உருவாகியது!

இந்த ஆன்மீகத் தலைவர்களின் பெயரால் பிரிவினை - பிரிவினை என்று முஸ்லிம் உம்மத் பல கூறுகளாக சிதைந்துப் போய்விட்டது.

'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற அந்த இறைத்தூதரின் வாக்கை முஸ்லிம் உம்மத் ஆழமாக விளங்கி இருந்தால் அந்த தலைவரின் மறைவுக்குப் பிறகு வேறு எந்த ஆன்மீகத் தலைவரும் உருவாகி இருக்கவே மாட்டார்கள்.

இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்று பகிரங்கமாகவும், அழுத்தமாகவும் அறிவித்து விட்டு சென்ற அந்த தலைவரை விட்டுவிட்டு 'எங்களைப் பின்பற்றாதீர்கள் - எங்களைப் பின்பற்றாதீர்கள் எங்களை பின்பற்றினால் நாங்கள் உங்களுக்கு பொறுப்புதாரியாக மாட்டோம் மனிதர்கள் என்ற முறையில் எங்களிடம் தவறுகள் ஏற்படும் அதனால் எங்களைப் பின்பற்றாதீர்கள்' என்று மீண்டும் மீண்டும் சொல்லி விட்டு சென்ற பிந்தியவர்களை இந்த சமுதாயம் பின்பற்றத் துவங்கியதுதான்.

விளைவு! சமுதாயத்தில் ஷாபி பள்ளிகளும் ஹனபி பள்ளிகளும் சமுதாய பிரிவின் அடையாளச் சின்னங்களாக உயர்ந்தன. உன் பள்ளி வேறு, என் பள்ளி வேறு. நீ வேறு, நான் வேறு. உன் கொள்கை வேறு, என் கொள்கை வேறு என்ற கூப்பாடுகள் தலைத் தூக்கின. கடந்தக் காலங்களில் இதற்காக பல தலைகள் உருண்டன.

இறைவனை மறக்க செய்து இசையிலும், போதையிலும், காமத்திலும் முஸ்லிம்களை திளைக்க செய்ய 'தர்காக்கள்' புற்றீசல்கள் போல உலக நாடுகளில் ஆங்காங்கே முளைத்தன. இன்றைக்கும் கூட ஏராளமான மட முஸ்லிம்கள் 'தர்காவே சரணம்' என்று காவடி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் சில ஆன்மீகத் தலைவர்கள் வழி காட்டிகளாக இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கிறார்கள்.

மனதால் இறைவனை நினை. நினைவுகள் முற்றும் போது அவனோடு இரண்டற கலந்து விடலாம் உடலால் அவனை வணங்கத் தேவையில்லை. இரண்டற கலந்த பிறகு நீ அவனை வணங்கினால் உன்னையே நீ வணங்கிக் கொள்கிறாய் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இல்லை என்ற மோசமான கொள்கையை மக்களிடம் விதைத்து 'பணம் பண்ணும்' ஆன்மீகத் தலைவர்கள் உதித்தார்கள்.  ஒரு சமுதாயம் பள்ளிவாசல்களையும் தொழுகைகளையும் மறந்து திண்ணைத் தூங்கிகளாக உருவாயின.

இவர்களில் ஒருவர் இன்னொருவரின் கொள்கை வழி குறித்து சிந்திக்க முடியாத அளவிற்கு  - சிந்தித்தாலும் மாற்றுக் கொள்கையுடையவர்கள் மீது வெறுப்புணர்வே மிஞ்சும் அளவிற்கு இவர்களிடம் மடத்தனங்கள் காலூன்றி நிலைப் பெற்றன.

இதற்கெல்லாம் என்னக் காரணம்?

'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற அந்தக் கொள்கை சரியாக விளங்காமேயேயாகும்.

'என்னைப் பின்பற்றுங்கள்' என்பதை இந்த சமுதாயம் விளங்கி இடைத் தலைவர்கள் இல்லாமல் அந்த ஒரேத் தலைவரையே இந்த சமுதாயம் பின்பற்ற துவங்கி விட்டால் அது உலக அளவில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

இதை நாம் வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை. வேறு எந்தத் தலைவரும் இல்லாமல் அந்த ஒரேத் தலைவரைப் பின்பற்றிய நபித் தோழர்கள் உலகில் எத்தகைய புரட்சியை செய்துக் காட்டினார்கள் என்பதை சிந்தியுங்கள் நம் வார்த்தையின் அர்த்தம் புரியும்.

தொடரும்

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா...? பகுதி : 2

பகுதி : 2

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா...?

ஆலு இம்ரான் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் 31 வசனத்தின் விளக்கத்தை முன் தொடரில் ஒரளவு கண்டோம்;. இறை நேசம் என்ற ஆன்மீகத் தேட்டத்தின் வழிகாட்டல் முஹம்மத் (ஸல்) அவர்களிடமே இருக்கின்றது என்பதை அந்த வசனத்தின் வழியாக இறைவன் சொல்லியுள்ளான் என்பதை உதாரணங்களுடன் விளக்கினோம். அதன் தொடர்சியை இப்போது பார்ப்போம்.

'(மனிதர்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக'..

ஆன்மீகம் என்பதே இறைவனை நேசிப்பதற்குரிய - அவனை அடைவதற்குரிய வழியாகும் என்பதில் எந்த ஆத்திகரும் மாற்று கருத்துக் கொள்ள மாட்டார். அவர்களில் பெரும்பான்மையோர் ஒரு விஷயம் குறித்து எப்போதும் சிந்திப்பதே இல்லை என்பதை நாம் இங்கு சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும்.

இவர்கள் 'நாங்கள் இறைவனை நேசிக்கிறோம்' என்ற பெயரில் ஏராளமான சடங்குகள் - சம்பர்தாயங்கள் - வணக்கத்தளங்கள் - வணக்க வழிபாடுகள் - யாத்திரைகள் - செலவுகள் என்று  குதூகல ஆர்பாட்டங்கள் செய்துக் கொண்டிருக்கிறார்களே தவிர 'நாம் இறைவனை நேசிக்கின்றோமே... இறைவன் நம்மை நேசிக்கின்றான... என்ற எதிர்மறையான - அலட்சியப்படுத்தவே முடியாத - அலட்சியப்படுத்தக் கூடாத - கேள்வியை தங்களுக்குள் என்றைக்கும் இவர்கள் கேட்டுக் கொள்வதே இல்லை.

மனம்போன போக்கிலோ - மத குருக்களின் போக்கிலோ கண்மூடித்தனமாக போவதே ஆன்மீகம், இறை நேசம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனம் போன போக்கில் நடந்தால் இறைவனை அடைந்துக் கொள்ள முடியும் என்ற இவர்களின் மாய சித்தாந்தம் தான் ' தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான்' என்றும் 'எந்த நதியாய் இருந்தால் என்ன கடலில் கலப்பதுதான் முக்கியம்' என்றும் தீர்மானமற்ற தத்துவங்களை ஆன்மீக அடையாளமாக முன் வைக்கின்றது.

இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல் பெறாத, மனிதனாக உருவாக்கிக் கொண்ட இத்தகைய அன்மீகத் தத்துவங்களை அதை உருவாக்கியவர்களாலேயே தங்கள் வாழ்க்கைக்கு முன்னுதாரனமாக கொள்ள முடியாது. தெய்வம் என்றால் அது தெய்வம் சிலையென்றால் வெறும் சிலைதான் என்பவர்கள், அது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது என்று விளக்கம் கூறுபவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இதை பொருத்திப் பார்க்க சம்மதிப்பார்களா..  அவர்கள் வீட்டில் உள்ள பொருளை ஒருவன் எடுத்துக் கொண்டு 'இது உன் பொருள் என்றால் உன் பொருள், என் பொருள் என்றால் என்பொருள்தான்' என்கிறான். 'இது என் தத்துவத்திலிருந்து பெறப்பட்ட வழிகாட்டல் என்பதால் இது உன் பொருளா.. என் பொருளா.. என்பதை நீயே தீர்மானித்துக் கொள்' என்பார்களா..

'எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றன' என்று தீர்மானங்கள் இன்றி பாய்ந்தோடும் நதிகளை உதாரணமாக்குவோர் 'அனைத்து நாடுகளின் அரசியல் சாசனமும் நல்லதைதான் ஏவுகின்றன' என்று பிற நாட்டு அரசியல் சாசனத்தை நம் நாட்டில் நடைமுறைப் படுத்துவார்களா...

ஒரு கருத்தை அழகாக சொல்கின்றோமா என்பதை விட அறிவுப் பூர்வமாக சொல்கின்றோமா என்பதுதான் முக்கியம். சில அழகியல் தத்துவங்கள் மனிதனின் அறிவை உறங்க வைத்துவிடும் என்பதற்கு நாம் எழுதிய இவைகளே சான்றாகும்.

நாம் இறைவனை நேசிக்கின்றோமா என்பது எவ்வளவு முக்கியமான கேள்வியோ அதை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக 'இறைவன் நம்மை நேசிக்கின்றானா..' என்ற கேள்வி நம் உள்ளங்களில் பிறக்க வேண்டும். இறைவன் நம்மை நேசிக்கும் வழியை அறிந்தால் தான் நாம் அவனை நேசிக்கும் வழி இடற்பாடுகள் இல்லாமல் காணப்படும்.

இறைவன் நம்மை நேசிக்கின்றானா என்பதை நாமாக சொந்த முயற்சியில் அறிந்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அது உணர்வியலுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட நிலையாகும்.

இறைவன் நம்மை நேசிப்பதாக இருந்தால் 'நான் இந்த வழியில் உங்களை நேசிக்கிறேன்' என்று அவன் சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்வதின் வழியாகத்தான் நாம் அதை அடைந்துக் கொள்ள முடியும்.

உணர்வியலுக்கும் அறிவியலுக்கும் கட்டுப்படாத அந்த மகத்தான வழியை இறைவன், நாம் விளக்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறான்.

'(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் வழியாக) அவன் உங்களை நேசிப்பான் என்று (தூதரே) நீர் கூறும்'.

முஹ்ம்மத் என்ற அந்த இறைத்தூதரை பின்பற்றுகிறவர்கள் எவரோ அவர்களை இறைவன் நேசிப்பான் என்று இந்த வசனம் உறுதி கூறுகிறது.
அவரை பின்பற்றுவதில் அலட்சியம் கூடாது.

இது ஒரு சாதாரண உபதேசம் அல்ல. தேடலின் இலக்கு இதுதான். இறைவனை நம்பி வாழும் உலக ஆன்மீகவாதிகள் அனைவருமே இறைவனிடம் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகவே ஆன்மீகவாதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களில் நிலைக் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய ஆனந்தமோ, அச்சமோ அவர்களை அவன் பால் இயங்க வைக்கும் உந்து சக்தியாக இருக்கின்றது. இந் நிலையில் 'இந்த வழியாகத் தான் என்னை அடைய முடியும்' என்ற வழிகாட்டல் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் போது அதை ஆன்மீகவாதிகளால் அலட்சியப்படுத்த முடியுமா..?

 மதம் கடந்த மனநிலை வேண்டும்.

''இறைவனை நேசிக்கும் நிலையில் நான் ஒரு ஹிந்து'', ''இறைவனை நேசிக்கும் நிலையில் நான் ஒரு கிறிஸ்தவன்,'' ''நான் புத்த மதத்தவனாக இருக்கும் நிலையில் இறைவனை நேசிக்கிறேன்''  முஹம்மதை பின்பற்றுவதன் வழியாகத்தான் இறைவன் எங்களை நேசிப்பான் என்றால் நாங்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாற வேண்டுமா..!' என்ற கேள்வி இங்கு பிறக்கத்தான் செய்யும்.

சில அடிப்படைகள் மீது தெளிவின்மையின் காரணமாகவே இந்த கேள்வி பிறக்கின்றன.

இறைவன் முஸ்லிம்களுக்கு சொந்தமானவனும் அல்ல. முஹம்மத் முஸ்லிம்களுக்காக அனுப்பப்பட்ட தூதரும் அல்ல. முஸ்லிம்களாக அறியப்படும் இவர்களும் ஆன்மீகவாதிகளே. இறைவனை அடையும் வழியை முஹம்மத் என்ற இறைத்தூதர் வழியாகப் பெற்று அதில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் முதல் கட்டமாக இவர்களை 'கட்டுப்பட்டவர்கள்' (முஸ்லிம் என்ற அரபு பதத்திற்கு கட்டுப்பட்டவர் என்று பொருள்) என்று இடுகுறி பெயரால் இறைவன் சுட்டிக் காட்டுகிறான். முஹம்மத் என்ற இறைத்தூதர் வழியாக இறைவனை அடையும் வழியை பெறும் எவரும் 'கட்டுப்பட்டவர் - முஸ்லிம்' என்ற அந்த இடுகுறிப் பெயருக்குள் வந்து விடுவார். 'முஸ்லிம்' என்பது ஒரு இனத்திற்கு சூட்டப்பட்டப் பெயரல்ல என்பதை விளங்குவது அவசியம். எனவே இறைவன் நம்மை நேசிக்க வேண்டும் என்ற தேடலில் நாம் இறங்கும் போது ஏற்கனவே நாம் இருக்கும் மதத்தை ஒரு அடையாள சின்னமாக்கிக் கொண்டு அந்த தேடலை துவங்கக் கூடாது. அது பல முட்டுக்கட்டைகளை நமக்கு ஏற்படுத்தி விடும்.

இந்தியா என்ற நாட்டில் ஒருவர் வாழ்வதால் தன்னை இந்தியன் என்றும், அந்த நாட்டின் உள்ளே இந்த மொழியைப் பேசுவதால் தன்னை தமிழன் என்றும் அடையளப்படுத்திக் கொள்ளும் அதே நியாயம் தான் இறைவனை அடையும் வழியைப் பெற்றப்பிறகு தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலும் அடங்கி இருக்கிறது.

மருத்துவக் கல்விக் கற்றவர் தமக்கு 'டாக்டர்' என்று அடையாளமிட்டுக் கொள்கிறார்,

பொறியியளாளர் ஒருவர் 'இன்ஜினியர்' என்ற அடையாளத்துடன் வெளி உலகில் உலவுகிறார்,

ஒரு நாட்டை சார்ந்தவர் அந்த நாட்டவராக தம்மை அடையாளம் காட்டுகிறார்,

குலமாகவோ - கோத்திரமாகவோ வாழ்பவர்கள் கூட தங்கள் குலத்தையும் - கோத்திரத்தையும் அடையாளமாக்கிக் கொள்கிறார்கள் எனும் போது இறைவனை அடையும் வழியைப் பெற்றவர்கள் 'இறைவனுக்குக் கட்டுபட்டவன் என்ற அர்த்தத்தில் தம்மை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் என்ன இழப்பு வந்துவிடப் போகிறது?

எனவே ஆன்மீகத் தேடலில் நாம் இறைவனை நேசிக்கிறோம் என்பதை விட இறைவன் நம்மை நேசிக்கிறானா என்பது அர்த்தம் வாய்ந்த கேள்வியாக பிறக்க வேண்டும் அப்போதுதான் ஆன்மீகத் தேடல் ஒரு முழுமைப் பெற்றதாக அமையும். இறைவன் நம்மை  நேசிக்கின்றானா என்ற கேள்வி ஒரு ஆன்மீகவாதியிடம் என்றைக்கு பிறக்கின்றதோ அன்றைக்கே அவன் அதற்கான விடையை கண்டு பிடிக்கும் தேவைக்கு ஆட்பட்டு விடுகிறான். அவனது தேவை பூர்த்தி செய்யப்படும் வழிகாட்டல் குர்ஆனில் அடங்கியுள்ளது.

'(தூதரே) நீர் கூறும், நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் வழியாக) இறைவன் உங்களை நேசிப்பான் என்று'.
............

பாவங்களுக்கு பரிகாரம்.

அடுத்த முக்கியமான பலம் வாய்ந்த கேள்வி. தவறு - பாவம் செய்வதிலிருந்து விடுபட்ட மனிதர்கள் உலகில் எவராவது உண்டா..? 'எவரும் இல்லை' என்பதே பரிசீலிக்க தேவையில்லாத பதிலாகும்.

எது ஒன்றுக்கும் ஒரு எதிர்வினை - எதிர் செயல் இருக்க வேண்டும் என்பது இயற்கை. அப்படி பார்க்கும் போது பாவத்திற்கான எதிர்வினை - எதிர்செயல் என்ன என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும். பாவத்திற்கான எதிர்வினை என்பது விரிவான பதில்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

நாடுகள் - சட்டங்கள் - பாதுகாப்புகள் - அரண்கள் என்ற அனைத்தும் பாவத்திற்கான எதிர்வினையில் முன்னணியில்    வந்து நிற்கும்.

திட்டமிட்ட குற்றங்கள் அனைத்தும் பாவங்களே என்ற அடிப்படையில் இத்தகைய குற்றவாளிகள் அனைவரும் பாவிகளாவர். பாவங்களுக்கு பரிகாரம் என்ன...? 'தண்டனை' என்பதுதான் சரியான சொல் என்றாலும் அதற்காகவே நீதிமன்றங்கள் - சாசனங்கள் - காவல்துறைகள் என்றிருந்தாலும் எல்லா குற்றவாளிகளும் இங்கு அகப்படுவதுமில்லை. பிடிப்படும் அனைவரும் குற்றவாளிகளாகவே இருப்பதுமில்லை. குற்றவாளிகளாகவே இருந்தாலும் குற்றத்திற்கு முறையான தண்டனைகள் கிடைப்பதுமில்லை. இந்த சட்ட விவாதத்திற்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம். பாவம் செய்துவிட்ட ஒருவன் மனசாட்சியால் உந்தப்பட்டு அதிலிருந்து மீள நினைக்கிறான். ஆன்மீகவாதியாக இருந்தால் பாவத்திற்கு பரிகாரம் என்னவென்று பார்க்கவே செய்வான்.

இத்தகையோருக்கு வழிகாட்டுகிறது இந்த வசனம்.

(தூதரே) நீர் கூறும்: (மனிதர்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் காரணத்தால்) இறைவன் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் என்று..

முஹம்மத் என்ற அந்த மிகப்பெரிய ஆன்மீகத் தலைவரின் வழியாக இறைவனை நேசிப்பவர்கள் - இறைவனால் நேசிக்கப்படுபவர்கள் இவர்களுக்கொரு பரிகார வழிகாட்டல் இருப்பதை இறைவன் இங்கு சுட்டிக்காட்ட தவறவில்லை. இறைவனை அறிந்து அவன் காட்டும் வழியில் வாழ நினைக்கும் ஒருவன் மனிதன் என்ற அடிப்படையில் சிற்சில பாவங்கள் செய்கிறான் என்றால் (அது மனித உரிமை மீறலாக இருக்காத வரையில்) அதை இறைவன் மன்னிப்பதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. அந்த வகையில் இந்த இறைத்தூதரை பின்பற்றுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் இந்த வசனம் கூறுகிறது.

இனி, இந்த வசனம் முஸ்லிம்களுக்கு என்ன பாடம் போதிக்கறது என்பதை பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

Saturday, April 9, 2011

அவளொரு முஸ்லிம் பெண்

அவளொரு முஸ்லிம் பெண்

உடை உடுத்தும் மனித பண்பாட்டில் சர்ச்சை மற்றும் விவாதப் பொருளாகிப் போய் நிற்பவள் முஸலிம் பெண் மட்டும் தான். உடுப்பில் வேறு எந்த சமுதாயமும் இந்த அளவு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. நிறைவாகவோ எத்துனை குறைவாகவோ உடுத்திக் கொண்டு வீதி தோரும் அலைந்தாலும் முஸ்லிம் சமுதாயம் உட்பட எந்த ஆணும் இந்த சர்ச்சையில் சிக்குவதில்லை. அப்படியானால் முஸ்லிம் பெண் மட்டும் இதில் ஏன் முதல் பொருளாகிப் போனாள்? என்பதை நாம் சிந்தித்துதான் ஆக வேண்டும்.


அவளொரு முஸ்லிம் பெண்.



மதம் என்ற நம்பிக்கையுடனும், சமூகம் என்ற அந்தஸ்துடனும் இயங்கும் மனிதவாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்வோமேயானால் இஸ்லாத்தை விடுத்து பிற மத சமூக பண்பாட்டில் "அனைத்திலும் நீ இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டும்" என்ற ஒரு அறிவுரை முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மனிதனின் தனி வாழ்வு - பொதுவாழ்விலிருந்து கடவுள் நம்பிக்கை பிரித்தெடுக்கப்பட்டு, அவனது வாழ்க்கை முறையை வேறுபட்ட இரு பிம்பங்களாக்கி வைத்துள்ளது. 'கோயிலில் போய் கும்பிடு அதை கடந்து வந்தப் பிறகு நீ கோபுரத்தில் வாழ்ந்தாலும் சரி, குடிசையில் வாழ்ந்தாலும் சரி அங்கு கோயிலை - கும்பிடும் இறைவனைப் பற்றி நினைக்கத் தேவையில்லை' என்ற நிலையே நீடிக்கிறது. சில - பல சிந்தனையாளர்களால் 'உன் தனிவாழ்விலோ - பொதுவாழ்விலோ இறைவன் தலையிடக் கூடாது" என்ற போதனையும் முன் வைக்கப்படுகிறது. (மசூதியிலும் - கோயிலிலும் மட்டும் குடும்பம் நடத்தும் இறை நம்பிக்கை மனித வாழ்விற்கு தேவைதானா... என்ற சர்ச்சைக்குள் நாம் நுழையவில்லை)

ஆனால் முஸ்லிம் ஆண் - பெண் இவர்களின் நம்பிக்கை "இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டியுள்ளான்" என்பதாகும். (இந்த நம்பிக்கை சரியா.. தவறா.. என்பதை நாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்). இந்த நம்பிக்கைத்தான் முஸ்லிம் பெண்களை மற்றப் பெண்களை விட சற்று அதிகமாக உடை உடுத்தத் தூண்டுகிறது. இது அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட நம்பிக்கை அடிப்படையில் அமைந்த உடையாகும்.

திணிக்கப்படுகிறதா...

முஸ்லிம் பெண்கள் விரும்பாத நிலையில் அவர்கள் மீது இந்த உடை திணிக்கப்பட்டு விட்டது போன்ற ஒரு தோற்றத்தை சில எழுத்தாளர்கள் அவ்வப்போது முன் வைக்கிறார்கள். விரும்பி ஏற்காத நிலையில் திணிக்கப்படும் எதுவும் நீண்ட காலத்திற்கு நிலைப் பெற்று நிற்காது என்பது மெத்த படித்தவர்களுக்கு விளங்காமல் போய்விட்டதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனெனில் 'நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் " என்ற கூட்டத்தில் நிற்பவர்களாகவே இவர்கள் விளங்குகிறார்கள்.

உண்மையில் மத நம்பிக்கை என்ற பெயரில் பெண் விரும்பாத நிலையில் அவள் மீது இத்தகைய உடை திணிக்கப்பட்டிருந்தால் அதற்கெதிராக உலகலாவிய போராட்டம் என்றைக்கோ வெடித்திருக்கும். வெடித்தக் காலங்களிலேயே இந்த திணிப்பு காலாவதியாகிபோயிருக்கும். மத நம்பிக்கை என்ற துவக்கத்திலிருந்து பல நூற்றாண்டுகள் கடந்தப் பிறகும் அந்த மேலதிக உடை புழக்கத்திலிருக்கிறது என்றால் இதை திணிப்பு என்றுக் கூறுபவர்கள் தூர நோக்கு அற்றவர்கள் என்பதே பளிச்சிடுகிறது.
எந்தத் திணிப்பாவது நீண்டகாலம் வாழ்ந்த - வாழ்கின்ற வரலாற்றை எடுத்துக் காட்டுங்களேன் பார்ப்போம்.

வழக்குகள் ஏதும் உண்டா...?

பெண்களுக்கு எதிராக நடக்கும் அனேக கொடுமைகள் வழக்குகளாக்கப்பட்டு பின்னர் வரலாற்று நிகழ்வுகளின் கசங்கல்களாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் பதிவு செய்யப்படுகின்றன. "மேலதிக உடை எங்களுக்கு சுமையானவை - அடிமைத்தனமானவை" என்று முறையிடப்பட்ட, எதிர்க்கப்பட்ட வழக்குகளும் - சம்பவங்களும் உலகில் எத்துனை என்பதை யாராவது எடுத்துக் காட்ட முடியுமா... "

முக்காடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது" என்று சில நாடுகளில் பள்ளியின் நிர்வாகம் கட்டளையிட்டபோது 'எங்கள் தலை முந்தானைகளால் உங்கள் பள்ளிக் கூடத்திற்கு எத்தகையக் கெடுதியும் வரைப்போவதில்லை. அதே சமயம் நீங்கள் எங்கள் முக்காடுகளை கழற்றுவதன் மூலம் எங்கள் மனங்களைப்புண்படுத்துகிறீர்கள்" என்ற எதிர்வாதம் மாணவிகளால் முன்வைக்கப்பட்ட சம்பவங்களையும் - நிர்வாகம் முக்காடை கழற்றுவதில் குறியாக நின்றபோது மாணவிகள் நீதி மன்றத்தை அணுகுகிறார்கள் என்ற சம்பவத்தையும் தான் உலகம் கண்டு வருகிறது.

இஸ்லாமிய நீதி மன்றங்கள் - இந்திய நீதி மன்றங்கள் - உள்ளுர் ஜமஅத்துகள் இங்கெல்லாம் ஜீவனாம்சம் உட்பட தலாக், சொத்து போன்ற வழக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை கனிசமான அளவைப் பெற்றுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. இதே இடங்களில் முஸ்லிம் பெண்கள் தங்கள் உடைகளுக்கு எதிராக தொடுத்த வழக்குகள் எத்துனை?
தீர்மாணிக்க வேண்டியது பெண்களா..?

பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று ஆண்கள் பேசக்கூடாதாம். பெண்கள் தான் பேச வேண்டுமாம். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமாம். கருத்து முன் வைக்கப்பட்டு அது ஆமோதிக்கவும் பட்டுள்ளது.முஸ்லிம் பெண்கள் பேச துவங்கி "புர்காவே புண்ணியம்" 'புர்காவே கண்ணியம்" என்று ஓட்டுப்போட்டு விட்டால் பெண்ணினம் அனைத்தும் அதை ஒப்புக் கொண்டு அதை அணிய துவங்கி விடுமா...? முஸ்லிம் பெண்கள்தான் பேச வேண்டும் என்ற கருத்து ஏன் வைக்கப்படுகிறது? அவள் புர்கா என்பது அடிமைத்தனம் என்று கூறிவிடுவாள் அந்த கருத்தை வைத்தே புர்காவைக கழற்றி பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்திலா..

அவளாக விரும்பி அணியும் உடைப் பற்றி அவளே விமர்சிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகை மனநிலையைக் காட்டுகிறது என்பது உலகிற்கு புரியாமல் இல்லை.

பெண்களின் உடையை பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டுமா... இனி பார்ப்போம்.

உடை கழற்றும் ஆண் வக்கிரம்

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை நேசக்தகுமாரர் அக்கறையோடு வெளிபடுத்தி உள்ளார்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர் எழுதிய கட்டுரையை அவரே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை என்பது புலப்படும்.

முஸ்லிம் பெண்கள் அணியும் மேலதிகமான உடைக்கும் அவர் எடுத்துக் காட்டிய தகவல்களுக்கும் தொடர்பு எதுவுமில்லை என்பதை நாம் அடுத்தப்பகுதியில் விளக்குவோம். அப்போது அந்த கட்டுரையின் யதார்த்தம் என்ன என்பது உலகிற்கு விளங்கும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக" பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை
நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.
அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

"பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்"?.

அவர் பதிலளித்தார்.

"நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்"

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும், ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல்
சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்."எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்."

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

I A S தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து IAS அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.

2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும். (இங்குதான் அதாவது
மூன்றாவது கருத்துக்குதான் நேசக்குமாரர் விமர்சனக்கட்டுரை வெளியிட்டுள்ளார். அதை அடுத்துப் பார்ப்போம்)

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரியும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை
ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடைஉடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு
பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் நேசக்குமாரர்கள் அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று முன்பு கேள்வி வைத்தோம். நேசக்குமாரர் பதில் சொல்லவில்லை.

" அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் போய் ஜோலியை பாப்பியலா" என்று அழகுத் தமிழில் முழங்கிய அந்தப் பெண்ணும் இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.

மனைவியிடம் பால் குடிப்பது ஹராமா..? பதில்கள் - 32

*இறைநம்பிக்கையை மறைக்கலாமா..
**மகளின் வாழ்வுக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கலாமா...
***பெண்கள் மெட்டி அணிதல்..
****விபச்சாரம் செய்யும் ஆணின் மனைவியும் அதே வழியிலா.. *****பிரசவத்தின் போது கணவன் பக்கத்தில் இருப்பது ஹராமா..
******அந்த 72 கூட்டம்..
*******சிவப்பு ஆடை,
********சலாம் சொல்லக் கூடாத நேரம்...
*********மனைவியிடம் பால் குடித்தால் மகனாகி விடுவார்களா..
**********அமுக்கு பிசாசின் அராஜகம்....
 
கேள்வி பதில் தொகுப்பு - 32

392) கேள்வி: நான் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸுலுஹூ என்று மனதலவில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர் உற்றார் உறவினர்கள் நான் இஸ்லாத்துக்கு மாறுவதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். நான் என்னுடைய இஸ்லாமிய ஏற்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறேன். என்னுடைய கேள்வி நான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவிக்காததற்காக மறுமையில் தண்டிக்கப்படுவேனா?

இறைவன் அவனை நம்பிய அடியார்களை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கு சில பொழுதுகளில் சில காரியங்கள் நெருக்கடியாக தெரிந்தாலும் அதற்காக நாம் மனம் சஞ்சலப்பட்டாலும் இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைப்பெற்றிருந்தால் அதற்கும் இறைவன் புறத்திலிருந்து கூலி கிடைத்து விடும் என்பதை இஸ்லாம் தெளிவாகவே சொல்லியுள்ளது.

இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள நிலையல்ல. இஸ்லாத்துடைய ஆரம்ப கால வரலாற்றை எடுத்து பார்த்தால் அன்றைய இறை நம்பிக்கையாளர்கள் கடின நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக இருந்த உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை மக்காவில் மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றவர்களில் பெரும்பாலோர் உமர் போன்றவர்களுக்கு பயந்து தங்கள் இறை நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தனர். இதற்கு இறைத்தூதர் அனுமதியும் அளித்தார்கள். உமர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தான் அங்கு அனைவரின் இறை நம்பிக்கையும் பகிரங்க அறிவிப்பாகின.

சில நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இறை நம்பிக்கையில் - இஸ்லாத்தில் - அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள நிலையில் அதை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவே செய்கிறது. கீழுள்ள இறை வசனம் அதை தெளிவாக அறிவிக்கிறது பாருங்கள்.

எவர் (ஈமான்) இஸ்லாமிய நம்பிக்கைக் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் இறை நிராகரிப்பைக் கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு (அல் குர்ஆன் 16:106)

'நான் இறை நம்பிக்கையாளன் தான்' என்று உள்ளத்தில் இஸ்லாம் இல்லாத நிலையில் யார் கிண்டலாக இறை நம்பிக்கையை எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இந்த வசனம் முன் வைக்கும் அதே வேளைஇ இக்கட்டான சூழ்நிலைக்காக தனது இஸ்லாமிய நம்பிக்கையை தற்கலிகமாக மறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் பாவமான காரியமல்ல. என்பதையும் இறைவன் தெளிவுப்படுத்தியுள்ளான். இந்த வசனத்தில் இடம் பெறும் '.எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை)' என்ற வாசகம் உங்கள் மன அமைதிக்குரியது.

ஆனாலும் இஸ்லாம் ஒரு வாசனை மலருக்கு ஒப்பானது. அது உங்கள் வழியாக தனது வாசனையை வெளிப்படுத்தித் தான் தீரும். இறைவன் உங்களுக்கு அருள் புரிந்துள்ளான். உங்கள் வழியாக எத்துனைப் பேருக்கு இந்த பெரும்பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அவன் தான் அறிவான்.

மிகவும் அமைதியாக சூழ்நிலையை அணுகுங்கள். எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற அவசர பேர்வழிகளிடம் முதலில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக சிந்திக்கக் கூடியவர்களிடம் வெளிபடுத்துங்கள். எந்த சந்தர்பத்திலும் நிதானம் இழந்து விடாதீர்கள்.

ஒருவேளை கடைசிவரை உங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை வெளிபடுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள் உங்கள் எண்ணத்திற்கும்இ முயற்சிக்கும் தகுந்த பலன் கிடைத்து விடும்.

இறைவனின் உவப்பிற்குரியவர்களே நேர்வழிப் பெறுவார்கள். அந்த வகையில் நீங்கள் பாக்கியம் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காக நாங்களும் இறைவனைப் புகழ்கிறோம். அவனுக்கு நன்றி செலுத்துகிறோம். எப்போதும் அவனுடன் தொடர்புடன் இருங்கள்.
----------------------------

393) கேள்வி - சிலபேர் எந்த முறையில் வேண்டுமாலும் தொழுது கொள்ளலாம் இறைவன் நமது உள்ளத்தைதான் பார்க்கிறான் நாம் நெஞ்ஞின் மீது கைகட்டி தொழுகிறோம என்று பார்ப்பதில்லை என கூறுகிறார்கள் . நாம் மாற்றி தொழுதால் நரகம் கிடைத்துவிடாது எனவும் கூறுகிறார்கள் இது சரியா?

தொழுகை என்பது இறைவன் விரும்பும் ஒரு அமலாகும். அதை இறைவன் விரும்பும் விதத்தில் தான் செய்ய வேண்டும். அவன் ஒரு தூதரை அனுப்பி அந்த தூதர் காலம் முழுவதும் தொழுது காட்டிஇ இப்படித்தான் தொழ வேண்டும் என்று கட்டளையும் இட்டு விட்டு போன பிறகு 'எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் இறைவன் உள்ளத்தைத்தான் பார்க்கிறான்' என்றவாதம் எவ்வளவு அறியாமையானது என்பதை விளங்கலாம்.

'இறைவன் உள்ளத்தைத்தான் பார்க்கிறான்'  என்ற வாதத்தை முன்னிருத்தி பல முஸ்லிம்கள் தொழுவதே கிடையாது. காரணம் கூறும் போது நான் உள்ளத்தால் இறைவனோடு உறவாடுகிறேன் அது அவனுக்குத் தெரியும் என்றெல்லாம் உளறிக் கொட்டுகிறார்கள். இறைவன் உள்ளத்தைப் பார்க்கிறான் என்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கொள்ள முடியாது. கொள்ளக் கூடாது. உள்ளத்தை ஊடுறுவி அறியும் இறைவன் தான் இறைத்தூதர்களை அனுப்பி அவர்களை அவன் விரும்பும் விதத்தில் வாழவைத்து அவர்களை முஸ்லிம்களுக்கு மாடலாக்கி அவர்களைப் பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டுள்ளான். 'அந்தத் தலைவரைப் பின்பற்ற வேண்டுமா..? என்ற குர்ஆன் விளக்கவுரைக் கட்டுரையில் இதை விரிவாக விளக்கியுள்ளோம் அவசியம் அதைப் படிக்கவும். (இங்கு கிளிக் செய்யுங்கள்)

'இறைவன் உள்ளத்தைப் பார்க்கிறான் அது போதும்' என்ற வாதம் இறைத்தூதர்களின் வாழ்க்கையைப் பொய்பிக்கும் வாதமாகும். இறைவன் உள்ளத்தைப் பார்க்கிறான். என்பதை உங்களையும் எங்களையும் விட மிகத் தெளிவாக விளங்கியவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள். இறைவனுடன் நேரடியாக உரையாடி வந்தவர்கள். அவர்கள் இரவு முழுதும் நின்று வணங்கி தன் நன்றியை வெளிப்படுத்தினார்கள். நெஞ்சில் கைக் கட்டித் தொழுதுள்ளார்கள். விரலசைத்துத் தொழுதுள்ளார்கள் என்றால் இதைவிட இன்றைக்கு சிலர் சொல்லும் 'இறைவன் உள்ளத்தைத்தான் பார்க்கிறான் எப்படி வேண்டுமானாலும் தொழுதுக் கொள்ளலாம்' என்ற வாதம் எந்த வகையில் சிறந்ததாகும் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

-----------------------------

394) கேள்வி : எனக்கு 1998 ம் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது அப்போது எனக்கு 'அகீகா' (பெண் குழந்தைக்கு 1ஆடும் ஆண் குழந்தைக்கு 2ஆடும்) கொடுக்கவேண்டும் என்ற சட்டம் தெரியாது தற்போது எனக்கு ஒரு சில ஹதீஸ்களை படிப்பதன் மூலம் தெரியவந்தது எனவே நான் தற்போது இதை கொடுக்கலாமா? எவ்வாறு எவ்வளவு கொடுக்கவேண்டும்? 

அகீகா என்பது குழந்தை பிறந்த சந்தோஷத்தை பிறருடன் பகிர்ந்துக்கொள்வதற்காக உள்ள ஏற்பாடாகும். வசதி படைத்தவர்கள் குழந்தை பிறந்த முதல் வாரத்திற்குள் அகீகா கொடுத்து விட வேண்டும். அதுதான் நபிவழி. அகீகா கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் வசதியும் இருந்தும் முதல் வாரத்தில் கொடுக்க முடியாதவர்கள் அடுத்து வரக் கூடிய நாட்களில் அந்த எண்ணத்தை நிறைவேற்றி விட நபிவழிகள் அனுமதியளிக்கின்றன. இந்த நாட்கள் கடந்து விட்ட பிறகு அகீகாவைப் பற்றி சிந்தித்து பலனில்லை. உங்களுக்கு குழந்தை பிறந்து 7 வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் இப்போது அகீகா கொடுக்க எண்ணுவது வேண்டாத ஒன்றாகும். நீங்கள் அகீகா கொடுக்க வேண்டும் என்ற அறிவை இப்போது பெற்றுள்ளீர்கள். இறைவன் நாடி அடுத்த குழந்தை உங்களுக்கு பிறந்தால் அந்த குழந்தைக்கு அகீகாவை நிறைவேற்றி சந்தோஷப்படுங்கள்.

-----------------------------

395) கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)எனது மகளை மணம் முடித்து 1 வருடம் ஆகிறதுஇ இப்போது அவள் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறாள் (அல்ஹம்துலில்லாஹ்) பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் என என்மகளின் புகுந்த வீட்டார் நிர்ப்பந்தம் செய்கிறார்கள்இ எனக்கோ அதில் விருப்பமில்லைஇ இப்போது தாயாகியிருக்கும் என் மகள் பிறந்தபோதே இது போன்ற அனாச்சாரங்களை ஒதுக்கி வந்தவன் நான். இப்போது என் முன்னே நிற்பது கொள்கையா? மகளின் வாழ்வா?என்ற ஊசலாட்டம். நிர்பந்தத்துக்கு பனிந்து விழா நடத்தினால் அல்லாஹ்வின் (வீண் விரயம் செய்யாதீர்கள்) என்ற கட்டளைக்கு மாறு செய்தவனாகி விடுவேனோ என்று பயமாக உள்ளதுஇ இப்பிரச்சினையில் நான் என்ன செய்வது?

இது ஒரு இக்கட்டான நிலை என்று எண்ணாதீர்கள் அதுவே உங்களை மனத்தளர்ச்சி அடைய செய்து விடும். புகுந்த வீட்டுடன் எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று உங்கள் மகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு அவர்களுடன் நீங்கள் பேசுங்கள். உங்கள் சம்மந்திகளுடன் பேசுவதை விட உங்கள் மருமகனுடன் பேசுங்கள். அவர் உங்கள் உணர்வுகளை புரிந்துக் கொண்டால் பிரச்சனை எளிதாக முடிவுக்கு வந்து விடும். விழாவை விட மார்க்கத்திற்கும் எங்கள் உணர்விற்கும் மதிப்பளியுங்கள் என்று கூறுங்கள். எங்களுக்கும் விழா கொண்டாட ஆசைதான். மார்க்கம் அதை விரும்பாததால் ஒதுங்கி நிற்கிறோம் என்பதை புரிய வையுங்கள்.

நிர்பந்தப்படுத்துபவர்கள் எதற்கும் அதே பாணியை கடைபிடிக்கவே செய்வார்கள். இன்றைய நிர்பந்தத்திற்கு பணிந்தால் அதையே காரணம் காட்டி அடுத்தடுத்த பிள்ளைகளுக்கும் இதே போக்கை மேற்கொள்ள துணிவார்கள். எனவே முடிந்தவரை அவர்களுடன் பேசி இத்தகைய போக்கை தவிர்ப்பதே பிற்காலங்களுக்கும் சரியான தீர்வாக அமையும்.
எத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கும் அவர்கள் கட்டுப்படும் நிலையில் இல்லை என்றால் அவர்களின் போக்குக்கு விட்டு விடுங்கள். உங்கள் எண்ணங்களை அறிந்த இறைவன் உங்களை குற்றம் பிடிக்க மாட்டான். இதற்காக மகளின் வாழ்வுடன் விளையாடும் போக்கை அடியோடு தவிர்க்கவும்.

--------------------------------

396) கேள்வி: பெண்கள் காலில் தங்கத்தில் மெட்டி அணியலாமா? விளக்கம் தரவும்.

பொதுவாக அனுமதிக்கப்பட்ட எதுவொன்றின் மூலமாகவும் ஆண்களோ - பெண்களோ தங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். தங்கம் ஆண்களுக்கு விலக்கப்பட்டு பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். எனவே தங்கத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் மாற்றி உடம்பில் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் அணிந்துக் கொள்ளலாம். அந்த வகையில் பெண்கள் தங்க மெட்டி - தங்க கொலுசு உட்பட எதுவும் அணியலாம் தடையொன்றும் இல்லை.

அதே சமயம் மெட்டி அணிவதற்காக சொல்லப்படும் காரணங்களை நாம் அலட்சியப்படுத்த வேண்டும். இந்து மதப் பெண்களில் திருமணமான பெண்கள் மட்டும் தான் மெட்டி அணிவார்கள். திருமணமாகி விட்டது என்பதன் அடையாளங்களில் ஒன்றாக அதை கருதுகிறார்கள். அம்மி மிதித்து மெட்டி அணிய வேண்டும் என்ற சடங்கை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். ஒரு முஸ்லிம் பெண் இந்த சடங்குகளில் எதுவொன்றோடும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. மெட்டி என்பது விரல்களில் அணிந்து அழகு படுத்திக் கொள்ளும் ஒரு நகை என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருக்க வேண்டும். திருமணமாகாத கன்னிப் பெண்கள். திருமணமானவர்கள்இ விதவைப் பெண்கள்இ விவாகரத்துப் பெற்றவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இதை அணியலாம்.

மெட்டியை மாற்றுமதத்தவர்கள் முக்கியமாக கருதுவதால் அதை நாம் அணியக் கூடாது என்று சிலர் கூறுவது பொருந்தக் கூடிய வாதமல்ல. பிற மதத்தவர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சடங்கையும் காரணத்தையும் வைத்துள்ளார்கள். பெண்கள் கைகளில் அணியும் வளையல்கள் கூட நிரந்தரமில்லாத போக்கே அங்கு நீடிக்கின்றது. கணவன் இறந்தவுடன் குங்குமத்தை மட்டும் அழிக்காமல் கையோடு கையை அடித்து வளையல்களை நொறுக்கும் காட்சியை நாம் அறிந்துள்ளோம். பெண்கள் தலையில் பூ வைப்பதற்கும் அங்கு காரணம் உண்டு.

அதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டால் சில உடைகள் உட்பட எதையும் நம்மால் அணிய முடியாமல் போய்விடும். எனவே மார்க்கம் அனுமதித்த பொருள் என்றால் அதை முஸ்லிம் பெண்கள் அணியலாம் பிரச்சயையொன்றும் இல்லை.

-----------------------------

397) 'விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர (வேறு பத்தினிப்பெண்ணைத்) திருமணம் செய்யமாட்டான்இ (இவ்வாறே) விபச்சாரியை-  விபச்சாரம் செய்பவனையோ அல்லது இணைவைப்பவனோ தவிர (பரிசுத்தமானவேறு யாரும்) திருமணம் செய்ய மாட்டாள் இ(த்தகையோரைத் திருமணம் செய்வ)து இறை நம்பிக்கையாளர்களின் மீது தடுக்கப்பட்டுள்ளது' என்று குர்ஆன் கூறுகிறது. எத்தனையோ குடும்பங்களில் ஒழுக்கமான பெண்களுக்கு குடி விபச்சாரம் போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ள கணவர்கள்  அமைகின்றார்கள். அப்படி என்றால் இவர்களின் மனைவிமார்களும் இவர்களைப் போன்றவர்களா?

ஒழுக்கமான பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!

ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாக - ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

அவர்கள் அவ்வாறு விரும்பினாலும் அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.

கணவனின்றி தவறான வழியில் வாழும் ஒரு பெண் திருமணத்தை நாடும் போது தனக்கு கணவனாக வருபவன் யோக்கியனாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஏனெனில் தவறான வழியில் உழலும் அவளுக்கு இப்படிப்பட்ட கணவன் தகுதியானவனல்ல. அதிகபட்சமாக அவளைப் போன்றே நாற்றமெடுத்த ஒருவனைத் தான் அவள் மணமுடிக்க வேண்டும் என்பதே அந்த வசனம் முன் வைக்கும் வாதமாகும்.

தவறான வழியில் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் எத்துனையோ ஆண்களுக்கு ஒழுக்கமும் - கண்ணியமும் மிக்க மனைவிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் மனைவியின் ஒழுக்கத்தையும் நன்நடத்தையையும் பார்த்து அத்தகைய கணவர்கள் வெட்கி தலைகுனிந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

நல்ல கணவர்களுக்கு கெட்ட மனைவி அமைந்து விடுவதும் நடக்காமலில்லை. ஒரு ஆண் கறைப்பட்டால் அது அவனோடு போய்விடும். பெண் கறைப்பட்டால் அது அவளது குடும்பத்தையே பாதிக்கும் என்பதால் நல்ல கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட தீய நடத்தையுள்ள பெண்கள் சிந்தித்து தங்கள் தவறுகளிலிருந்து விடுபட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். நல்ல கணவர்கள் இத்தகைய மனைவிகள் விஷயத்தில் பொறுமையை மேற் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிமார்களான நூஹு மற்றும் லூத் (அலை) ஆகியோரிடம் பாடம் உள்ளது.  (மேலதிக விளக்கத்திற்கு 289வது கேள்விக்கான பதிலை பார்க்கவும்)

-------------------------------

398) கேள்வி: நகைக்கு ஒவ்வொரு வருடமும்; ஸகாத் கொடுக்க வேண்டுமா? நாண் சிலதை தான் பாவிக்கிறேன் . நான் 2 வரூடம் கொடுத்து வந்தேன். விளக்குங்கள் பாத்திமா லண்டன்.

நீங்கள் பாவிக்கக் கூடிய நகையாக இருந்தாலும் சரி, பீரோ, பேங்க் லாக்கர் போன்ற இடங்களில் வைத்து பாதுகாக்கும் நகையாக இருந்தாலும் சரி அவை உங்கள் சொத்தேயாகும். அத்தியாவசிய தேவைக்கு போக மீதமுள்ள மொத்த சொத்துக்கும் கணக்கிட்டு வருடந்தோரும் ஜகாத் கொடுக்கத் தான் வேண்டும். தங்க நகைகளைப் பொருத்தவரை அவை மேலதிக சொத்துக்களாகவே இஸ்லாம் கருதுகிறது. எனவே தங்க நகைகள் அனைத்திற்கும் ஜகாத் கொடுக்கத் தான் வேண்டும். கொடுக்காமல் விடுபட்டிருந்தால் அவைகளுக்கும் கணக்கிட்டு கொடுத்துவிடுங்கள். நீங்கள் வசிக்கும் லண்டனில் ஜகாத் பெற தகுதியுள்ளவர்களை தேட முடியாத நிலை இருந்தால் உங்கள் தாய் மண்ணான இலங்கையில் ஜகாத் தேவையுள்ளவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுப்புங்கள். ஒரு முறை கொடுத்து விட்டு நிறுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

ஆண்டுதோறும் கணக்கிட்டு கொடுக்கப்படத்தான் வேண்டும்.

---------------------------------

399) கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும்.. ஹலோ..நான் நஜ்மிலா இஸ்மின் நெதர்லாந்திலிருந்து..ஒரு விஷயம் பற்றி விளக்கம் பெற விரும்புகிறேன்.. நீங்கள் எனக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன்.. அதாவது நான் கற்பமாக இருந்தேன், பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் எனது கணவர் என்னருகில் இருந்தார். எங்களது குடும்ப நண்பர் ஒருவர் இது ஹராம்இ இவ்வாறு கணவர் பிரசவ நேரத்தில் உடனிருப்பது தவறு என்று சொன்னார். எனது கேள்வி.. ஒரு கணவர் தனது மனைவியின் அருகில் பிரசவ நேரத்தில் இருக்கலாமா? கூடாதா? விளக்கம் தரவும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 

நல்லக் கேள்வி. கணவன் - மனைவிக்கு மத்தியிலுள்ள உறவு என்பது படுக்கையறை உறவு மட்டுமல்ல. கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அனைத்து வகையிலும் உதவ வேண்டிய உறவே கணவன் மனைவிக்கு மத்தியில் இருக்கும் சிறந்த உறவாகும்.

சமைப்பதற்கு பெண், சாப்பிடுவதற்கு ஆண். துவைப்பதற்கு பெண், உடுத்துவதற்கு ஆண் என்று குடும்பத்தில் பெண்ணை உழைப்பாளியாகவும் ஆணை முதலாளியாகவும் ஆக்கி வைத்துள்ள போக்கு ஆணாதிகத்தின் குறியீடாகும்.  இதனால் தான் மனைவியின் கஷ்டத்தை அனேக ஆண்களால் புரிந்துக் கொள்ள முடியாமலே போய் விடுகிறது.

நபி(ஸல்) வீட்டில் இருந்தால் எங்களோடு குடும்பப் பணிகளில் ஒத்தாசை செய்வார்கள். பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு செல்வார்கள் என்று அன்னை ஆயிஷா(ரலி) சொல்கிறார்கள் (புகாரி)

இதுதான் சிறந்த குடும்பத்திற்கு அடையாளம்.

உடலோடு கலந்து விடுவதுதான் இல்லறம் என்று இல்லறத்திற்கு வெறும் பாலியல் சாயம் மட்டும் பூசாமல் அது உள்ளத்தோடும்இ உணர்வோடும் கலந்துப் போகக்கூடிய ஒரு வாழ்க்கை என்பதை ஆண் மகன்  உணர்ந்தால் அந்த கணவன் மனைவிக்கு மத்தியில் ஆயிரம் சந்தோஷங்கள் பூவாய் மலர்ந்துக் கொட்டும். இந்த சந்தோஷம் எப்போது சாத்தியம் என்றால் மனைவியை புரிந்துக் கொண்டு அவளுக்காக வாழ்வதில் தான்.

மாதவிடாய் சந்தர்பங்களில், குழந்தை பெற்றெடுக்கும் சந்தர்பங்களில் பெண் அனேக துன்பத்திற்கு ஆளாகிறாள். இந்த துன்பங்களை கணவன் கண்டு அறிய முடிவதில்லை.  மனைவி குழந்தை பெற்றெடுக்கும் போது கணவன் அருகில் நின்று பார்க்க வேண்டும். அப்படி நடந்தால் அந்த சந்தர்பத்தில் மனைவிக்கு அது ஒரு பெரும் ஆருதலாகவும்இ அவளை புரிந்துக் கொண்டு கூடுதலாக நேசிப்பதற்கு கணவனுக்கு ஒரு தூண்டுதலாகவும் அது இருக்கும் என்று உளவியல் துறை அறிஞர்களும், டாக்டர்களும் கருதுகிறார்கள். ஒரு குழந்தைக்கும் அடுத்து குழந்தைக்கும் போதிய இடைவெளி விட இது வழிவகுக்கும் என்பதும் அவர்களின் முடிவாகும்.

இல்லறத்தில் ஒருவருடன் ஒருவர் கலந்து இரண்டற ஆகிவிட்ட பிறகு 'பிரசவ நேரத்தில் கணவன் - மனைவியின் பக்கத்தில் இருப்பது ஹராம்' என்பதற்கு எதை ஆதாரமாக எடுத்துக் காட்டுவார்களோ தெரியவில்லை.

உங்கள் குடும்ப நண்பர் எங்கோ வெளியில் கேள்விப்பட்டதை உங்களிடம் கூறி இருக்கலாம். இஸ்லாமிய சட்டம் அதை ஹராமாக்கியுள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை.

----------------------------------

400) கேள்வி: நோன்பில் இறந்து போவோருக்கு சொர்க்கம் என்று சொல்கிறார்களே அது உண்மையா?

நோன்பில் இறந்துப் போவோருக்கு, ஹஜ்ஜில் இறந்துப் போவோருக்கு, மக்காவில் இறந்துப் போவோருக்கு, இன்னும் சில நாட்களைக் குறிப்பிட்டு இந்த நாட்களில் இறந்துப் போவோருக்கெல்லாம் சுவர்க்கம் என்ற நம்பிக்கை பரவலாக நம் மக்களிடம் இருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ்விற்காக போர்களம் சென்று தன்னுயிரை அற்பணிக்கும் உயிர் தியாகிகளைத் தவிர மற்ற நாட்களில் மரணிப்பவர்களுக்கு சுவர்க்கம் என்ற நம்பிக்கையெல்லாம் ஆதாரமற்ற வெறும் யூகமே - நம் மக்களின் கண்டுபிடிப்பேயாகும்.

நோன்பில் நோன்பே வைக்காதவர்கள் கூட இறந்துப் போவார்கள் என்பதையெல்லாம் இந்த மக்கள் சிந்தித்தால் இந்த நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்து விடுவார்கள்.

-----------------------------------

401) கேள்வி: சலாம் சொல்லக் கூடாத சமயம் எது? சாப்பிடும் போது சலாம் சொல்லலாமா..? 

மலம் சிறுநீர் கழிக்கும் சந்தர்பங்களைத் தவிர சலாம் சொல்லக் கூடாத நேரம் என்றெல்லாம் எதுவுமில்லை.

மல ஜலம் கழிக்கும் போது பேசிக் கொள்ளும் மனிதர்களை அல்லாஹ் வெறுக்கிறான் என்று ஒரு செய்தியுள்ளது. (நஸயி) பேசிக் கொள்ளக் கூடாது என்பதிலிருந்தே அந்த சந்தர்பங்களில் சலாம் சொல்லக் கூடாது என்பதை விளங்கலாம்.

நபி(ஸல்) சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் சலாம் சொன்னார். நபி(ஸல்) சிறுநீர் கழித்து முடியும் வரை பதில் சொல்லாமல் தன் தேவை முடிந்ததும் என்னை இந்த நிலையில் பார்த்தால் சலாம் சொல்லாதே.. என்று சொன்ன செய்தி முஸ்லிமில் வருகிறது.

இது தவிர மற்ற எந்த சந்தர்பங்களிலும் சலாம் சொல்லிக்கொள்ளலாம். சாப்பிடும் போது சலாம் சொல்ல தடையில்லை.

-----------------------------------

402) கேள்வி: அந்த 72 கூட்டதினர் என்றால் என்ன? யார் அவர்கள்?

மார்க்க அறிவற்ற நிலை, பிரித்தாளும் சூழ்ச்சி, பதவிமோகம் போன்ற அனேக காரணங்களுக்காக சிலரால் சமுதாயம் கூறுபோடப்படுகிறது. அதை சுட்டிக் காட்டி எச்சரித்து முறைப்படுத்தும் செய்தியே நபி(ஸல்) அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட அந்த செய்தியாகும்.

பனு இஸ்ரவேலர்கள் (மூஸாவின் சமுதாயம்) 71 பிரிவானார்கள். நஸாராக்கள் (ஈஸாவின் சமுதாயம்) 72 பிரிவானார்கள். எனது சமுதாயம் 73 பிரிவாக பிரியும். நானும் என் தோழர்களும் இன்றைக்கு எப்படி இருக்கின்றோமோ அப்படி இருப்பவர்களைத் தவிர பிற 72 கூட்டம் நரகம் செல்லும் என்ற முன்னறிவிப்பு அந்த செய்தியில் உள்ளது. முஸ்லிம் உம்மத்துக்கு உள்ளேயே தம்மை தனிமைப்படுத்தி, தனிக் கூட்டம் கூட்டி, அரசியல் காரணங்கள் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக மக்களை பிரித்து வைத்திருக்கும் ஒவ்வொருவரும் 73வது கூட்டம் நாம் தான் என்று தமக்கு தாமே முத்திரைக் குத்திக் கொள்கிறார்கள்.

நபி(ஸல்) வாழ்ந்துக் காட்டியப்படி ஒருவரோ ஒரு குழுவோ இங்கு வாழ்ந்தாலும் கூட அவர்கள் தங்களை அந்த 73வது கூட்டமாக அடையாளம் காட்ட அனுமதியில்லை. அந்த அறிவிப்பு சுவர்க்கம் செல்ல தகுதியான ஒரு குழுவை மறுமையில் இறைவன் பிரித்தெடுப்பதைத் தான் கூறுகிறதே தவிர இந்த உலகில் குரூப்பிஸம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதை அனுமதித்து வந்த அறிவிப்பல்ல.   இந்த செய்தி தவறாக விளங்கப்பட்டதால் தான் அனைத்து பிரிவினருமே தங்களை 73வது கூட்டம் என்று கூறிக் கொள்கிறார்கள்.

உண்மையில் சமுதாயப் பிரிவினை என்பது ஒரு பிரிவினர் மற்றவர் மீது ஏதோ ஒரு விதத்தில் துன்பம் விளைவிக்கும் போக்கையே ஏற்படுத்தும். அதனால் 73வது கூட்டம் நாம் தான் என்று கூறிக்கொள்பவர்கள் பிறர் மீது ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறார்கள்.

உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் அளிக்கும் துன்பத்தை வேறு சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்'' எனும் (திருக்குர்ஆன் 6:65)

இந்த வசனத்தை நாம் ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உம்மத் பல குழுக்களாக பிரியும் போது சிலர் மற்ற சிலரால் துன்பத்துக்குள்ளாகுள்ளாவார்கள் என்ற எச்சரிக்கையை இறைவன் இந்த வசனத்தில் முன் வைக்கிறான்.

இந்த வசனத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி பிரிவினையை சரிகாண்பவர்கள் பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதையோ - துன்பம் விளைவிப்பதையோ தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதை நாம் கண்டு வருகிறோம்.

எனவே எந்த ஒரு ஆதாரமும் சமுதாய பிரிவினையை - கொள்கை ரீதியாகவோ இன்ன பிற காரணங்களுக்காகவோ பிரிவதை அனுமதிக்கவேயில்லை.

மேலும் நேர்வழிக்காக தொடர்ந்து பிரார்த்திக்க கற்றுக் கொடுக்கிறான் இறைவன். நேர்வழிக்காக தொடர்ந்து பிரார்த்திக்க கடமைப்பட்ட முஸ்லிம் நான் நேர்வழிப் பெற்றுவிட்டேன். 73வது கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டேன் என்று எப்படிக் கூற முடியும்?

'இறைவா.. உன் கோபத்திற்குள்ளானவர்கள், வழிதவறியவர்கள் சென்ற வழியல்லாத நீ அருள் புரிந்தவர்களின் வழியில் என்னை நடாத்து' என்ற பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்யும் காலமெல்லாம் நான் நேர்வழியைப் பெற்று விட்டேன் என்று இருமாப்புக் கொள்ளும் தகுதியை இழக்கிறான்.

மறுமையேஇ யார் நேர்வழிப் பெற்றவர்கள், யார் வழித்தவறி சென்று பாழ்பட்டுப் போனவர்கள் என்பதை துள்ளியமாக தீர்மானிக்கும் இடமாகும். அந்த 73வது கூட்டம் அங்கு பிரித்துக் காட்டப்படும். அதுவரை அந்தக் கூட்டத்தாருடன் மறுமையில் இணைவதற்காக இறைவன் கற்றுக் கொடுத்துள்ள பிரார்த்தனையை செய்துக் கொண்டு குர்ஆன் சுன்னா அடிப்படையில் நடந்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் நமது கடமை.
அந்த 72 பிரிவினர் யார் என்றெல்லாம் நம்மால் தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. நபி(ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு ஏராளமான பிரிவுகளை இந்த முஸ்லிம் உம்மத் கண்டுள்ளது. அவற்றில் தோன்றி உடன் மறைந்தவையும்இ சில - பல காலம் நீடித்து மறைந்தவையும், இன்று வரை நீடிப்பவையும் உண்டு. பிரிவென்று நாம் கருதுபற்றை கணக்கிட்டால் அவை 72யும் கடந்து செல்லும். நபி(ஸல்) எந்த நோக்கத்தில் 73 என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டார்கள் என்பது ஆய்வுக்குரியதாகும்.

முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தம்மை பிரித்துக் காட்டிக்கொள்வதை விடுத்து உம்மத்தின் அங்கமாக இருப்பதே நமது கடமையாகும். எந்தக் கூட்டம் என்றும் முத்திரைக் குத்திக் கொள்ள வேண்டாம்.

---------------------------

403) கேள்வி: சிவப்பு நிறத்தில் ஆடை அணியலாமா?

'உஸ்புர்' என்ற ஒருவித பழுப்பு நிற (காவி) உடை உடுத்துவதைத்தான் நபி(ஸல்) தடுத்துள்ளார்கள். ஆண்களுக்கு பட்டு தடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேறந்த நிரமும் தடுக்கப்படவில்லை.

நபி(ஸல்) சிவப்பு நிற உடை உடுத்தியிருந்தார்கள். அது அவர்களுக்கு மிகவும் அழகாக இருந்தது என்று அன்னை ஆய்ஷா(ரலி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் வருகிறது. எனவே தாராளமாக சிவப்பு வண்ணத்தில் உடை உடுத்தலாம்.

--------------------------

404) கேள்வி: தங்களின் கேள்வி பதில் பகுதியில் ஒரு நண்பர் மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் இதற்கான பதிலை முன்னரே கேள்வி பதில் பகுதியில் வெளியிட்டுள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும் என பதிலளித்துள்ளீர்கள், நான் தேடிப்பார்த்த வரையில் அது சம்பந்தமாக தங்கள் தொகுப்பில் எதுவும் கிடைக்க வில்லை. 'தேடுக' பகுதி மூலமும் முயற்சி செய்துவிட்டேன் பலனில்லைஇ எனவே இதற்கான பதிலை அடுத்த தொகுப்பில் இடம் பெறச் செய்யவும்.

மனைவியின் மார்பில் வாய் வைத்து பால் குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன் 'ஆம் கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்' என்று ஃபத்வா கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய ஃபத்வாக்கள் வருவதால் 'மார்க்க தீர்ப்பாவது மண்ணாங்கட்டியாவது' என்று மார்க்கத்தை அலட்சியப்படுத்தி விட்டு சந்தேகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் காரியத்தை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லறத்தில் சேரும் அந்த பொழுதுகள் எத்துனை உணர்ச்சிப் பூர்வமானவை என்பதை விளங்காதவர்கள் தான் இத்தகைய முடிவுகளுக்கு வருவார்கள்.

தனக்கென்று ஒரு பெண்ணை மனைவியாக சொந்தப்படுத்திக் கொண்ட ஒரு ஆணுக்கு 'அந்த பொழுதில்' 'அந்தக் காரியத்தை செய்யாதே' என்று தடை விதிக்கப்பட்டிருந்தால் இதில் நூறு சதவிகிதமான ஆண்கள் வரம்பு மீறிவிடவே செய்வார்கள்.

மனைவி உங்களின் ஆருதலுக்குரியவள் என்று சொல்லியுள்ள இறைவன் இதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் வழியாகவும் தடையொன்றும் வரவில்லை.

ஆரம்ப காலங்களில் குழந்தைகளை செவிலித் தாய் (மாற்றுத் தாய்) இடம் கொடுத்து பால் கொடுத்து வளர்க்கும் முறை இருந்தது. (இன்றைக்கும் இங்கொண்றும் அங்கொண்றுமாக இது நடக்கின்றது) இப்படி பிற பெண்ணிடம் ஒரு குழந்தை பால் குடிப்பதால் பால் கொடுத்த அந்த பெண்ணிற்கும் பால் குடித்த இந்தக் குழந்தைக்கும் உள்ள உறவை இஸ்லாம் தாய் - மகன் என்ற உறவாக்கியது. பால் குடித்த அந்த குழந்தை வளர்ந்தால் தனக்கு பாலூட்டிய அந்த பெண்ணையோ அல்லது அந்த பெண்ணிடம் பாலருந்திய பிற பெண்ணையோ இந்த ஆண் திருமணம் செய்ய முடியாது.

இதற்கெல்லாம் காலவரையறை என்ன? எப்போது பால் குடித்தாலும் தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடுமா..? என்பதெற்கெல்லாம் இஸ்லாம் பதில் சொல்லி விட்டது. தாய் மகன் என்ற உறவு ஏற்பட வேண்டுமென்றால் ஒரு குழந்தை இரண்டு வயதுக்குட்பட்ட காலங்களில் எத்துனை பெண்களிடம் பாலருந்தி இருந்தாலும் அத்துனைப் பெண்களும் அந்த குழந்தைக்கு தாய் என்ற அந்தஸ்த்தில் வந்து விடுவார்கள். இரண்டு வயதை கடந்த பிறகு எந்த பெண்ணிடம் அந்த குழந்தை பால் குடித்தாலும் அவர்களுக்கு மத்தியில் தாய் - மகன் என்ற உறவு ஏற்படாது என்பதுதான் இஸ்லாம் விளக்கியுள்ள பதிலாகும்.

குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் பூரணமாக பெற்றத் தாய் பாலூட்ட வேண்டும் (அல் குர்ஆன் 2:233)

பால்குடி உறவு ஏற்படுவதற்கான காலகட்டம் இந்த இரண்டு ஆண்டுகள் தான். இதை கீழ் வரும் நபிமொழி அறிவிக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், 'இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (குழந்தைப் பருவத்தில் அருந்தியிருந்தால்) தான்'' என்று கூறினார்கள். (ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த செய்தி புகாரியில் 5102.ல் இடம் பெறுகிறது)

குழந்தை பாலருந்தும் பருவத்தில் பசியின் காரணத்தால் வயிற்றை சென்றடையும் போதுதான் தாய் மகன் என்ற உறவு ஏற்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (உம்மு ஸலமா(ரலி) திர்மிதி)

இதே கருத்து இன்னும் சில ஹதீஸ்களிலும் வருகின்றது.

எனவே பால்குடி மறக்கடிக்கப்படும் இரண்டாண்டுகளுக்குள் ஏற்படும் இந்த உறவை கணவன் மனைவிக்கு பொருத்திக் காட்டுவது பெரும் அறியாமையாகும். மனைவியிடம் பால் குடித்தால் அவள் மனைவி என்ற அந்தஸ்த்தில் தான் இருப்பாள். இது இல்லறத்திற்கு உட்பட்ட காரியம் என்றே கருதப்படும்.

ஒரு விஷயத்தில் மட்டும் நாம் எச்சரிக்கையாக இருந்துக் கொள்ள வேண்டும். குழந்தையை பட்டினிப் போட்டுவிடக் கூடாது.

-------------------------------------

405) கேள்வி:  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக உணர்கிறேன். அதாவது யாரோ எனது முழு உடலையும் இறுக்கி அழுத்தி பிடித்துக் கொள்வதாக சில நிமிடங்கள் அவதிப்படுகிறேன். இந்த நேரத்தில் எனது வாய்இ கைகள் மற்றும் கால்கள் முற்றிலும் செயலிழந்து விட்டது போல் உணர்கிறேன். இது ஜின் அல்லது சைத்தானின் சேட்டையா? விளக்கவும். 

இந்த நிலைக்கு ஆட்படும் பலர் உடனடியாக இந்த முடிவுக்கே வந்து விடுகிறார்கள். அதாவது இது ஜின்கள் - ஷைத்தான்களின் காரியம் தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனால் அவர்களின் உள்ளத்தை ஒரு வித பயம் கவ்விக் கொள்கிறது. 'தன் மீது ஊமை பிசாசு ஏறி உட்கார்ந்துக் கொண்டது' என்று கூறுபவர்களும் உண்டு.

கை கால்களை அசைக்கமுடியாமல், பக்கத்தில் யாராவது இருந்தால் அவர்களைக் கூட அழைக்க முடியாமல், ஒரு இக்கட்டான அழுத்தம் சில நிமிடங்கள் நீடிக்கும்.

தூங்கும் போது தன்னையும் அறியாமல் இப்படியும் அப்படியுமாக புரண்டு படுத்து உறங்குபவர்கள் தான் உடல் கோளாறுகள் எதுவுமில்லாமல் உறங்குவார்கள். ஒரே பக்கமாக படுத்து உறங்குபவர்கள் உடம்பில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள். ஒரே பக்கமாக படுத்து உறங்குவதால் இரத்த ஓட்டங்களில் தடைப்பாடு - மாறுபாடு ஏற்படும் போதுதான் எழுந்ததும் உடல் வலி போன்றவற்றை உணர்வார்கள்.

உறக்கத்தில் ஏற்படும் கெட்டக் கனவு, அல்லது பயந்த உணர்வு, உங்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை, எத்துனை மணி நேரம் தூங்கினாலும் எழுந்தவுடன் தூக்கமே சரியில்லை என்ற உணர்வு, கண்கள் சிவந்து போதல் போன்ற அனேக மாறுபாடுகளுக்கு நமது உடல் கோளாறுகளே காரணமாகும். சில பொழுது மட்டும் இத்தகைய நிலையை உணர்ந்தால் அதற்கு முந்தைய பொழுது அவர்கள் சாப்பிட்ட உணவு காரணமாக இருக்கலாம்.

எனவே இது போன்ற நிலை தொடர்ந்தால் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். பிற பேய் - பிசாசு என்ற பயமெல்லாம் வெறும் வெத்துப் பேச்சாகும்.

அந்தத் தலைவரைப் பின்பற்ற வேண்டுமா? - 1 குர்ஆன் விளக்கம்

நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் மூலம்)இறைவன் உங்களை நேசிப்பான். உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன். நிகரில்லா அன்புடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல் குர்ஆன் 3:31)

ஆலு இம்ரானுடைய 31வது வசனம் இது.

இந்த வசனம் என்ன சொல்ல வருகிறது என்பதை அதை படித்த மாத்திரத்தில் 'பளிச்' சென்று புரிந்துக் கொள்ளலாம். ஆனால் புரிகிறது என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளும் வசனம் அல்ல இது. அதன் வார்த்தை ஒவ்வொன்றையும் சிந்தித்து படிப்பினை பெற வேண்டிய வசனமாகும்.
இனி விரிவாக அணுகுவோம்.

நீங்கள் இறைவனை நேசித்தால் என்னை பின்பற்றுங்கள்.

மனிதன் சதாவும் எதையாவது ஒன்றை நேசித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேசத்தை ஏதோ ஒரு விதத்தில் அவன் வெளிபடுத்தியும் காட்டி விடுகிறான்.

பணத்தை நேசிக்கிறான், மனைவி மக்களை நேசிக்கிறான், உணவையும் - தூக்கத்தையும் நேசிக்கிறான் - மற்ற மற்ற சிலர் மார்க்கத்திற்கு விரோதமான - சமூக தீங்கைக் கூட நேசிக்கிறார்கள். குடி - சூது - கடத்தல் -  பொதை பொருள் - அன்னிய பெண்கள் என்று நேசம் பல எல்லைகளையும் கிளைகளையும் கொண்டுள்ளது.

நாம் நேசிக்கக் கூடிய மனைவியை பார்ப்போம். அந்த தருணங்களில் மனம் குதூகளிக்கும் முகம் அந்த குதூகளிபை வெளியில் காட்டி விடும்.

பணத்தை நேசிப்போம். அது கையில் கிடைத்தவுடன் முகம் அதன் அடையாளத்தை காட்டும்.

தீய காரியங்களை செய்ய துணியும்போது சமூகத்திலிருந்து மறைந்து அந்த காரியத்தை செய்கிறான் மனிதன். 'மறைந்துக் கொள்ளுதல்' என்பது அவன் நேசத்தை காட்டி விடுகிறது.

ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலர்கள்களின்  அவசரமும் - துடிப்பும்; அவர்களின் நேசத்தை உலகிற்கு சொல்லி விடுகிறது.

தாயை கண்டவுடன் அவளை நேசிக்கும் குழந்தை தாவி தவழ்ந்து ஓடி வந்து அவள் மீதேறி தன் நேசத்தை வெளிபடுத்தும்.

புரிந்துக் கொண்ட - மனம் நிறைந்த நண்பர்கள் சந்திக்கும் போது சிரித்து மகிழ்ந்து ஆரத்தழுவி தங்கள் நேசத்தை உலகிற்கு காட்டுவார்கள்.

இப்படியாக நேசத்திலிருந்தும் அதை வெளிபடுத்திக் காட்டும் தன்மையிலிந்தும் விடுபட்ட மனிதர்கள் யாருமே உலகில் இல்லை.

இதே அடிப்படையில் இறைவனை நேசிக்கும் தன்மை மனித இயல்பில் கலந்துள்ளது. உலகில் வாழும் மக்களில் 95 சதவிகிதமானவர்கள் இறைவனை நேசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த நேசத்தில் தான் பெருத்த சிக்கல்களும் - முரண்பாடுகளும் தென்படுகின்றன.

முஸ்லிம்களாகட்டும், ஹிந்துக்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும், இன்னும் பிற மதத்தவர்கள், மொழிக் காரர்கள், நாட்டவர்கள் இவர்கள் அனைவருமே தன் தாயை - காதலியை - மனைவியை - நண்பர்களை - உற்றார் உறவினரையும் சுற்றத்தாரையும் நேசிக்கும் விதமும் அந்த நேசத்தை வெளி காட்டும் விதமும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. இதே மக்கள் இறைவனை நேசிக்கும் விதத்தையும் - அதை வெளி காட்டும் விதத்தையும் எண்ணிப்பாருங்கள்.!!!

முஸ்லிம்கள்.

இவர்கள் ஒரே இறைவனை மிக வலுவாக நேசிக்கக் கூடிய சமுதாயத்தவர்கள். ஆனால் இவர்களில் கணிசமானவர்கள் இறை நேசத்தின் ஆழத்தை புரிந்துக் கொள்ளக் கூடிய வழியை கற்காமல் அதில் பெரும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் இறந்துப் போனவர்கள் மீதும் அவர்களின் சவக் குழிகளின் மீதும் - மத குருக்களாக கருதப்படும் ஹஜ்ரத்கள் - ஷேக்குகள் என்ற மனிதர்கள் மீதும் அளப்பறிய நம்பிக்கை வைத்து அவர்கள் சொல்லும்படியெல்லாம் நடப்பதே இறை நேசம் என்றெண்ணி ஓரிறை கோட்பாட்டில் விபச்சார தன்மையை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதிலேயே நிலைத்தும் நிற்கிறார்கள்.

ஹிந்துக்கள்.

இந்தியா என்ற மிகப்பெரும் மக்கள் தொகையை கொண்ட நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் வாழ்பவர்கள். மிகச் சிறந்த அறிவாளிகள் - பண்பாளர்கள் - கல்வியாளர்கள் - சிந்தனையாளர்கள் என்று இவர்களின் தரம் பெருகி இருந்தாலும் இவர்களின் இறை நேசத்தின் வெளிபாட்டை - ஆன்மீக வழிபாட்டை கவனித்தால் அந்த தரம் மிக்கவர்களா இப்படி என்று எண்ணத்தோன்றி விடும். ஆம். மிக உயர்ந்த படைப்பாகிய மனிதர்கள் தன்னோடு எந்த விதத்திலும் - நிலையிலும் ஒப்பிட்டே பார்க்க முடியாத - அந்த தகுதி அறவே இல்லா - தவற்றையெல்லாம் வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்லும் - மண்ணும் - மரமும் - மட்டையும் - மலமும் - பாம்பும் - எலியும் - பல்லியும் - பறவையும் - இவர்களின் இறைவனாகிப் போய் இவர்களை ஆதிக்கம் செய்துக் கொண்டிருக்கிறது.

கிறிஸ்துவர்கள்.

வழிகாட்ட வந்தவரையே வணங்கத்துவங்கியவர்கள். பிறப்பும் - பசியும் - தாகமும் - இயலாமையும் - பலவீனமும் - தூக்கமும் - துக்கமும் - எரிச்சலும் - கோபமும் - கடைசியில் இறப்பும் கொண்ட - மலஜல குடலை சுமந்துக் கொண்டு வாழ்ந்த ஒருவரை இறைவனின் சந்ததி என்றாக்கி - அவருக்கு இறை மகன் என்று பெயரிட்டு பின்னர் அவரை கல்லாக்கி - சிலையாக்கி சிலையை நேசிக்கவும் - வழிபடவும் துவங்கி விட்டார்கள்.

கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நேசம்.

முரண்பாடுகள் கொண்ட இந்த அறியாமையை போக்க என்ன வழி? கற்றுக்கொடுப்பது என்பதை தவிர வேறு வழியில்லை. வலது கையால் உண்ணும் இயல்பான நிலையிலிருந்து மாறி இடது கையால் ஒரு குழந்தை உண்ணும் போது அங்கு அந்த குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பாகி விடுகிறது. அறிவிருந்தும் தெரிந்துக் கொள்ள சக்தியற்ற மாணவனுக்கு புரியும் விதத்தில் சொல்லிக் கொடுப்பது ஆசிரியரின் கடமையாகி விடுகிறது. அதே போன்று தான் இறை நம்பிக்கையும் இறை நேசமும் பாழ்பட்ட பழக்க வழக்கங்களால் கறை படியும் போது அதிலிருந்து அவற்றை தூய்மை படுத்தி மக்களுக்கு புரிய வைப்பது இறைவன் மீது கடமையாகி விடுகின்றது.

அந்த பாடத்தை செவ்வனே மக்களுக்கு போதிக்கும் பணியை இறைவன் இந்த வசனத்தில் துவங்குகிறான்.

'இறைத்தூதரே நீர் கூறும். மக்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று'

இறைவனை நேசிப்பதற்கும் இவரை பின்பற்றுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி இங்கு எழலாம். அர்த்தமுள்ள கேள்விதான். ஒரு அடிப்படையை புரிந்துக் கொண்டால் இதற்கு விடை கிடைத்து விடும்.

இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்று சொல்லப்பட்டவரும், சொல்பவரும் ஒரு சாதாரண மனிதராக மட்டுமில்லை. அவரை இறைவன் தன் தூதராக தேர்ந்தெடுத்துள்ளான். இறைத்தூதர் என்ற நிலையிலிருந்து அந்த வார்த்தை சொல்லப்படுகிறது. சொல்லக்கூடிய மனிதரை மட்டும் பார்க்காமல் அவருடைய தகுதியையும் பார்க்க வேண்டும்.

அவர் ஒரு இறைத்தூதர். இறைவனை பற்றி மக்களுக்கு அறிவித்து அவன் விரும்பும் விதத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பணிக்கப்பட்ட ஒரு உயர்ந்த மனிதர் அவர். தன் மீது விதிக்கபட்ட பணியில் அவர் ஒரு கடுகளவேனும் குறைப்பாடு செய்யவில்லை என்பதால் இறைவனை அறியும் விதத்தையும் - அவன் மீதான நேசத்தையும் அவரை பின்பற்றியே பெற்றுக் கொள்ளலாம் என்ற சூழ்நிலை இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.

மனிதர்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற வார்த்தை முஹம்மத்(ஸல்) அவர்கள் தன் விருப்பத்தில் சொன்ன வார்த்தையல்ல. அந்த வசனத்தில் 'நீர் சொல்வீராக' என்ற ஏவல் வந்துள்ளது. அதாவது இப்படி சொல்ல வேண்டும் என்ற கட்டளை இறைவனால் பிறப்பிக்கப்படுகிறது. இறைவனே அப்படி சொல்ல சொன்னதிலிருந்து அவனை அடையும் வழியை எவ்வளவு துள்ளியமாக முஹம்மத்(ஸல்) பெற்றுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

அந்த வழியை முஹம்மத் அவர்களை தவிர வேறு யாரும் பெறவில்லையா என்ற கேள்வி அடுத்து எழலாம். அனேக மக்கள் பெற்றிருந்தனர். அந்த மக்கள் அனைவருமே இறைத்தூதர்கள் என்ற அந்தஸ்தில் இருந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரும் முஹம்மத் அவர்களின் வருகைக்கு முன்னால் தம் தமது சமூகங்களுக்கு மட்டுமே வழிகாட்ட அனுப்பப்பட்டார்கள். பணியின் வட்டம் சிறியதாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையை பாதுகாக்கும் ஏற்பாடுகள் குறைவாகவே இருந்தன. அது மட்டுமின்றி அந்த இறைத்தூதர்களின் மறைவுக்கு பிறகு அந்தந்த மக்கள் இறைத்தூதர்கள் கொண்டு வந்த வழிமுறையில் - போதனையில் பல மாற்றங்கள் செய்து புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டனர். (இதற்கு உதாரணமாக கிறிஸ்துவத்தை குறிப்பிடலாம். இயேசு கொண்டு வந்த கொள்கை இன்றைக்கு பைபிளிலோ - கிறித்தவ உலகிலோ இல்லை. இயேசுவிற்கு பிறகு பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டதாக சொல்லிக் கொண்ட பவுல் என்பவரே   இன்றைய கிறித்தவத்தை உருவாக்கினார் இதற்கு பைபிளிலிருந்து அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்து வைக்க முடியும். ஒரு பெரிய மதத்தின் நிலையே இதுவென்றால் அவருக்கு முன்னால் வந்தவர்கள் பற்றிய நிலையை நாம் சாதாரணமாக புரிந்துக் கொள்ளலாம்.)
இன்னும் தெளிவாக சொல்லப் போனால் முஹம்மத் என்ற இறை;தூதரின் வருகைக்கான அவசியத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களே அவருக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தான். அவருக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களின் வாழ்க்கை முறை பாதுகாக்கப்பட்டிருந்தால் இன்னுமொரு தூதர் அவசியமில்லாமலே போயிருக்கும். இப்படி ஒரு நிலை இல்லாமல் போனதால் தான் முஹம்மத் அவர்களின் வருகை தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

முஹம்மத்(ஸல்) அவர்களின் பணி உலகலாவிய பணியாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையின் பாதுகாப்பு ஏற்பாடு மிக பலப்படுத்தப்பட்ட நிலையில் இறைவனால் ஆக்கப்பட்டது.

இறைத்தூதரே! நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம் என்று இவைன் கூறுகிறான் (அல் குர்ஆன் 34:28)

இந்நிலையில் உலக மக்களில் எவராக இருந்தாலும் அவர்கள் உண்மையில் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த தூதரை பின்பற்றுபவர்களாகத்தான் மாற வேண்டும்.

மக்களே நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்று தூதரே நீர் கூறும்.
                                 ...........
நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற அறிவிப்பு மிக ஆழம் மிக்கதாகும்.

இறைவனை நேசிப்பதாக இருந்தால் நேராக இறைவனையே பின்பற்றி விட்டு போக முடியாதா... சத்தியமாக முடியாது. 'பின்பற்றுதல்' என்றால் ஒருவரை மாடலாக்கி அவர் செய்வது போன்று செய்வதாகும். அ.ஆ.. இ,ஈ என்று சொல்லி கொடுக்கும் ஆசிரியரின் ஓசையையும் உச்சரிப்பையும் அப்படியே திருப்பி சொல்லும் குழந்தைகளின் நிலையே பின்பற்றுவதற்குறிய நிலையாகும். இறைவனை பின்பற்றுவது என்பது - அதாவது அவனைப் போன்றே செயல்படுவது - எவராலும் (எவராலும் என்பதை எவ்வளவு வேண்டுமானாலும் அழுத்தி உச்சரித்துக் கொள்ளுங்கள்) ஒருக்காலமும் முடியாது காரியமாகும். எவராலும் முடியாத அந்த தன்மைகளில் தான் உண்மையான இறை சக்தியே அடங்கியுள்ளது.
அவனை நேசிப்பதற்குறிய அடையாளம் என்னவென்றால் அவன் ஏவியப்படி வாழ்ந்துக் காட்டுவதேயாகும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவரே முஹம்மத் என்ற அந்த இறைத் தூதர் ஆவார்கள். அவர் வாழ்ந்துக் காட்டிய ஒவ்வொரு அங்குலத்திலும் இறை நேசத்திற்குறிய அடையாளங்கள் குவிந்துக் கிடப்பதால் உலகில் உள்ள எவரும் அவரைத்தான் தனக்கு மாடலாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தி இந்த அறிவிப்பையும் முன்னிருத்தி விட்டான்.

அவரை பின்பற்றி இறைவனை அறிதல்.

மனித வாழ்க்கையோடு பின்னி பிணைந்துப்போன இறை நம்பிக்கையில் தான் எத்துனை வேறுபாடுகள் - எத்துனை பாகுபாடுகள். கற்கால மனித சிந்தனையில் உதித்த மகா பயங்கரமான - மாயாஜாலமிக்க கடவுள் கொள்கையும், மனிதனாகவே கடவுளை வர்ணித்து - வடிவமைத்துக் கொண்ட மனித கடவுள் கொள்கையுமே நாத்திகம் உயிர் பெறுவதற்கான மூலக் கூறுகளை உருவாக்கி கொடுத்து விட்டது.

உண்மையான இறைவனை அறியும் வழியை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதரிடமிருந்துப் பெற்றால் அந்த பாடத்தில் கடுகின் முனை அளவிற்கு கூட பலவீனம் இருக்காது.

இறைவன் ஒருவன் - அவன் தனித்தவன் - பெறப்பட்டவனோ - பெற்றவனோ அல்ல - அவன் தேவையற்றவன் -  அவனுக்கு நிகராக எதுவுமில்லை -  எல்ல சத்கிகளையும் தன் அதிகாரத்திற்கு கீழ் வைத்துள்ளவன் அவன் - அவனோடு போட்டிப் போடக் கூடிய மாற்று சத்கி எதுவுமில்லை -  உறக்கம் - முதுமை - ஆசை - இச்சை - மறதி - மரணம் - என்ற எந்த கறையும் படியாதவன் அவன். எவரது கண்களுக்கும் - கருவிகளுக்கும் எட்டாத இடத்தில் இருந்துக் கொண்டு பிரபஞ்சம் அனைத்தையும் அவன் சூழ்ந்தறிந்து அவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். எந்த கண்களும் அவனை கண்டதில்லை. உலக வாழ்வில் எவரும் காண போவதுமில்லை. எந்த தவறை வேண்டுமானலும் செய்து விட்டு - சமூக கொடுமைகளில் சிறப்பாக பங்களித்து விட்டு - எப்படி வேண்டுமானலும் பொருளாதாரத்தை திரட்டி விட்டு - இறைவனுக்காக உண்டியலில் பணக் கட்டுகளையும் - தங்கத் தகடுகளையும் காணிக்கையாக்கி (இறைவனுக்கு லஞ்சம்) விட்டால் போதும் அவன் நம்மை ஆசிர்வதித்து விடுவான் என்ற சிந்தனை உங்களிடம் இருந்தால் நிச்சயம் நீங்கள் அழிவின் பாதையில் செல்கிறீர்கள் ஏனெனில் உண்மையான அந்த இறைவன் நீதி மிக்கவன். லஞ்சமோ, வாதாடுதலோ, பரிந்துப் பேசுதலோ அவனிடம் எடுபடவே படாது.  அப்படிப்பட்ட அந்த மகா சக்திக்கு கட்டுப்பட்டு வாழும் வாழ்க்கையே தூய்மையான வாழ்க்கை. இதுதான் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் மனிதகுலத்திற்கு வழங்கிய இறைக் கோட்பாடாகும். இந்த இறைக் கோட்பாட்டில்தான் உண்மையான இறை நேசம் அடங்கியுள்ளது. இப்போது அந்த வசனத்தைப் படியுங்கள்.

'மனிதர்களே நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும்'
                                                            ........

நாம் இறைவனை நேசிக்கிறோம் இறைவன் நம்மை நேசிக்கிறானா...

இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அடுத்தக்கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். சிறந்த பலனை அடைவதற்காக ஒருவன் கடினமாக உழைக்கிறான். ஒருவன் மிகுந்த சிரத்தையுடன் படிக்கிறான் இந்த உழைப்பாலும் படிப்பாலும் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி வாழ்வில் விரக்தியையும் தோல்வியையுமே சந்திப்பார்கள்.

தண்ணீர் என்பது மனித வாழ்க்கைக்கு எத்துனை அவசியமானது! 50 அடி தூரத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று தெரிந்து 'போரிங்' போட்டால் கிடைக்கும் தண்ணீரை கண்டு மனம் குதூகளிக்கிறது. சில இடங்களில் 200 அடி வரை பைப் இறக்கப்பட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் தண்ணீர் எங்கு இருக்கிறது என்ற அறிவு அவர்களுக்கு இல்லாததேயாகும்.
ஐம்பது அடியில் கிடைக்கும் சந்தோஷம் இருநூறு அடிகளை கடந்த  பிறகும் சிலருக்கு கிடைக்காமல் போவதை யோசித்துப் பார்த்தால் 'செயலுக்கு முன்னால் அதன் பலன் குறித்து சிந்திப்பது - ஆராய்வது' என்ற வழிக்காட்டுக் கொள்கை தெளிவாகும்.

போய் சேரக்கூடிய ஊரை மட்டும் ஒருவன் தெரிந்துக் கொண்டு அந்த ஊருக்கான வழியை தெரிந்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டு தன் பயணத்தை துவங்குகிறான் என்றால் இந்த பயணத்தின் முடிவு குறித்து யாராலும் தீர்வு சொல்ல முடியுமா...

உலகில் உள்ள அவ்வளவு ஆத்திகர்களுமே நாங்கள் இறைவனை அளவு கடந்து நேசிக்கிறோம் என்ற 'இறை நேச தேசத்திற்கு' தன் பணயத்தை துவங்கி விடுகிறார்கள். அதே சமயம் இறைவன் நம்மை நேசிக்கிறானா... என்ற அந்த வழியை - இறை நேச தேசத்தை அடையும் வழியை - அலட்சியப்படுத்தி விட்டுப் பயணிக்கிறார்கள். காற்றலையில் ஊர்கோலம் போகும் இவர்களின் இந்த ஆன்மீக தேடல் திக்குத் தெரியாமல் தான் அலைந்துக் கொண்டிருக்கும்.

தான் நேசிக்கும் - உயிரையே வைத்திருக்கும் அந்த பெண் தன்னை நேசிக்கிறாளா... அவள் மனதில் தனக்கு இடமுள்ளதா... இருவரும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ அவள் தன்னை அங்கீகரிப்பாளா... என்ற முடிவோ - முயற்சியோ - தேடலோ இல்லாமல் போன காதல் ஒருதலை காதலாகவே சிதைந்துப் போகும். இந்த ஒருதலை காதலில் அவ்வப்போது மன ரீpதியாக சில சந்தோஷங்கள் ஏற்படலாம். அவள் நினைவுகளே போதும் என்ற வரட்டு வார்த்தை வெளிப்படலாம். ஆனால் காதலியை மனைவியாக்கி அவளோடு வாழும் காலங்களில் கிடைக்கும் 'அற்புதமான இன்பத்தை' இந்த ஒரு தலை காதலர்களால் அடைந்துக் கொள்ளவே முடியாது.

இறைவன் நம்மை நேசிக்கிறானா என்று தெரிந்துக் கொள்ளாமல் நாம் இறைவனை நேசிக்கும் அந்த ஆன்மீகம் 'ஒருதலை ஆன்மீகம'hகவே அமைந்து போகும்.

நாம்இறைவனை நேசிப்பது போன்று இறைவனும் நம்மை நேசிக்க வேண்டும் அதுதான் முழுமையான ஆன்மீகமாக இருக்கும். இறைவன் நம்மை நேசிக்கின்றானா ? தொடரும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger